Skip to main content

பொன் நகைக்கு மாற்று... புன்னகை இழந்த கவரிங் நகை தொழிலாளர்கள்!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020

 

 Covering jewelry workers who lost their smile



கனவுகளில் மட்டுமே பொன் நகைகளை போட்டு அழுகு பார்க்கும் பல ஏழை பெண்களுக்கு கவரிங் நகைகள் வரபிரசாதமாக இருந்து வருகிறது. பொன் நகைகளைவிட மிக அழகாக கவரிங் நகைகளின் டிசைன்கள் பெண்களை கவர்ந்து வருகிறது. கவரிங்கில் பல டிசைன்கள் செய்து மகிழ்விக்கும் கவரிங் தொழிலாளர்களின் வாழ்கையில் மகிழ்வின்றி வேதனையே வென்று வருகிறது.


கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரம் கவரிங் நகைகளுக்கு பிரசித்தி பெற்றதாகும்.  கடந்த 20 ஆண்டுகளுக்குமுன் கவரிங் நகை செய்யும் தொழிலாளர்கள் இந்த ஊரில் அதிகமாக இருந்தனர். இதனால் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கு கவரிங் நகைகடைகள் திறக்கப்பட்டுவிட்டது. தமிழக அளவில் சிதம்பரம் கவரிங் என்றாலே அதற்கென தனி சிறப்பு உண்டு. இன்றும் பல பெரு நகரங்களில் கடையின் விளம்பர பலகைகளில் சிதம்பரம் கவரிங் என்று எழுதி வைத்திருப்பதை இப்போதும் காண முடியும்.

இந்த தொழிலில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வந்தநிலையில், நாளடைவில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக கவரிங் நகை செய்யும் பணிகள் தற்போது இயந்திரம் மூலம் நடந்து வருவதால் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக மாறியுள்ளது.

 

 


ஒரு கவரிங் தொழிலாளி ஒருநாள் முழுவதும் உழைத்தால் ரூ 200 முதல் 300 வரை மட்டுமே கிடைக்கும். கடந்த இரண்டு மாதமாக ஏற்பட்டுள்ள கரோனா கோரப் பிடிக்குள் கவரிங் நகை தொழிலாளிகளும் தப்பவில்லை. இதனால் தொழிலாளிகளுக்கு கிடைக்கும் சொற்ப தொகைக்கும் வழி இல்லாமல் போய்விட்டது. கவரிங் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் இந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளில் முடங்கினர்.

 

 Covering jewelry workers who lost their smile


இவர்களில் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இரண்டு முறை தலா ரூ1000 நிவாரணமாக வழங்கப்பட்டது. மாவட்டத்தில் சொற்ப எண்ணிக்கையிலான நகை தொழிலாளர்கள் மட்டுமே நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கின்றனர். கைவினை தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்றவர்களில் பலரும் தங்களது பதிவுகளை புதுப்பிக்காமல் இருந்ததால் அரசு அறிவித்த நிவாரண உதவியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இதனையறிந்த சில சமூக நலஆர்வலர்கள் இவர்களின் குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்களை வழங்கியுள்னர். அதுவும் மிகவும் சொற்ப அளவே வழங்கியுள்ளனர்.

கடந்த சில தினங்களாக கவரிங் நகை கடைகள் திறக்கப்பட்டும், கடைகளில் போதிய அளவு வியாபாரமில்லை.  கவரிங் நகையை மொத்த விலைக்கு வாங்க வரும் சிறு, சிறு வியாபாரிகள் கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வார்கள்.  தொடர் போக்குவரத்து இல்லாததால் கவரிங் நகைகள் வாங்க வருவதற்குக்கூட ஆளில்லை. கடைகள் திறக்கப்படும்போது வியாபாரம் இன்றி வெறிச்சோடி இருக்கிறது.


 

nakkheeran app




கவரிங் கடைகளில் இருந்து நகைகள் வெளியே செல்லாமல் அப்படியே உள்ளதால், கடைகள் திறந்தும் கவரிங் நகை தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் வேதனையடைந்துள்ளனர். பொன் நகைகளைவிட விதவிதமான டிசைன்களில் கவரிங் நகைகள் செய்து பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் தற்போது மகிழ்ச்சி இல்லை.

தமிழக அரசு நலவாரியத்தில் பதிவுசெய்த தொழிலாளர்கள், பதிவு செய்யாத தொழிலாளர்கள் என பார்க்காமல், கவரிங் நகை தொழிலாளி ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு தலா ரூ10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே வேலை இழந்து தவிக்கும் நகை தொழிலாளர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் கோவில் குளத்தில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
man who went to bathe in the Chidambaram temple pool drowned

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவில் பழம்பெரும் சிவன் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் சனிக்கிழமை மாலை திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவில் குளத்தில் இறங்கி சுவாமி மற்றும் பக்தர்கள் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் குளக்கரையில் கூடியிருந்தனர். சுவாமிக்கு குளக்கரையில் பூஜை நடந்து தீர்த்தவாரி நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து பக்தர்களும் பொதுமக்களும் குலத்தில் நீராடச் சென்றனர் அப்போது கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன்(47) என்பவர் கோயில் குளத்தில் இறங்கி நீராடினார். சிறிது தூரம் தண்ணீரில் நீந்தி சென்று குளத்தின் நடுவே உள்ள மண்டபம் அருகே நீரில் மூழ்கியுள்ளார். மீண்டும் அவர் வெளியே வரவில்லை. 

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பெயரில் நகர காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட வெங்கடேசனை குளத்தில் இறங்கி ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து ஒரு மணி நேரம் தேடிய நிலையில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.  இது குறித்து சிதம்பர நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story

வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை - நாளை முதல் அமல்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Shorter working hours scheme came into force in Germany from tomorrow

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சியில் இருந்து மீள ஜெர்மனி குறைவான வேலை நேரம் என்ற முறையை கடைப்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற குறைவான வேலை நேரம் என்ற முறையை உலகின் வளர்ந்த நாடுகள் கூட கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த முறை மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமாவதாகவும், அதன் மூலம் அவர்களது செயல்திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 21 நாடுகளில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியிலும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறை நாளை(1.2.24) முதல் கடைப்பிடிக்கப்படவுள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெர்மனிய தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த 6 மாதத்திற்கு மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.