Skip to main content

கோவாக்சின் தட்டுப்பாடு; டோக்கன் முறையில் தடுப்பூசி!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

Covaxin deficiency; Vaccine in token mode!

 

கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

 

சேலத்தில் நேற்று முன்தினம் (22.04.2021) வரை, கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை 2,10,136 பேர் போட்டுக்கொண்டுள்ளனர். இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 50 ஆயிரத்து 152 பேர் போட்டுள்ளனர். கோவாக்சின் தடுப்பூசி முதல் டோஸை எடுத்துக்கொண்டவர்கள் 35 ஆயிரத்து 301 பேர். அதேபோல் இத்தடுப்பூசியின் இரண்டாவது டோஸை 2,572 பேர் போட்டுள்ளனர். 

 

கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்களுக்கும் தடுப்பூசி மீது மெதுவாக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு நாள் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஆனால், அரசு மருத்துவமனைகளில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

 

கடந்த இரு நாட்களுக்கு முன்பு 13 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே சேலம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு வந்துள்ளது. குறைந்த அளவே தடுப்பூசி மருந்துகள் வந்ததால், மற்ற மையங்களுக்கும் சொற்ப அளவில் மட்டுமே பகிர்ந்தளிக்கப்பட்டது. 

 

இதனால் தடுப்பூசி மையங்களில் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்து டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் டோக்கன் பெறாதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். 

 

இதுகுறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கூறுகையில், ''நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் நாள்தோறும் சராசரியாக 500க்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகின்றனர். எல்லோருக்கும் தடுப்பூசி போடும் அளவுக்கு தற்போது மருந்துகள் இல்லாததால், முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு டோக்கன் வழங்குகிறோம். அதன் அடிப்படையில் ஒருநாளைக்கு அதிகபட்சமாக 200 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்கும் வரை டோக்கன் முறை பின்பற்றப்படும்'' என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

 

Next Story

சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Sonia Gandhi is infected with Corona for the second time!

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

 

இது தொடர்பாக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசின் நெறிமுறைகளின் படி, சோனியா காந்தி தனிமைப்படுத்துதலில் உள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

கடந்த மூன்று மாதங்களில் அவர் இரண்டாவது முறையாக, கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து கவலைத் தெரிவித்திருக்கும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

 

அவரது உடல் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்வுக்கும் பிரார்த்திப்பதாக கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

ஏற்கனவே, பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில், சோனியா காந்திக்கும் மீண்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.