Skip to main content

மோசடி வேலையில் ஈடுபட எஸ்.ஐ; கோவை டிஐஜி அதிரடி

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

covai gomangalam police sub inspector incident  

 

பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஏட்டாக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவை காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கோயம்புத்தூர் மாவட்டம் கோமங்கலம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மணிமாறன். இவர் பணியில் இருந்தபோது ஒட்டன்சத்திரம் பகுதியில் நடந்த விபத்து ஒன்றில் தொடர்புடைய வாகனத்திற்கு உரிய காப்பீடு இல்லாமல் இருந்துள்ளது. இதனை மணிமாறன் முறைகேடாகப் புதுப்பித்ததுடன், விபத்தானது  தான் பணியாற்றும் காவல்நிலைய எல்லைக்குள் நடைபெற்றதாக மோசடியாக வழக்குப்பதிவு செய்துள்ளார். இதுமட்டுமின்றி, மேலும் பல்வேறு நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் காணவில்லை என்ற சான்றிதழையும் சட்டத்திற்குப் புறம்பாக வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. காவல்நிலையங்களில் உள்ள ஆவணங்களில் காவல் ஆய்வாளரின் கையெழுத்தையும் மணிமாறனே போட்டதும் போலீசாரின் ஆய்வில் தெரியவந்துள்ளது. காவல்நிலையங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்களை போலியாக தயாரிப்பது, திருத்துவது உள்ளிட்ட பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டது போலீசாரின் தீவிர விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதைத் தொடர்ந்து, கோவை சரக டிஐஜி விஜயகுமார் மணிமாறனை சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்து தலைமைக் காவலராக பதவியிறக்கம் செய்து அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். போலீசார் ஒருவரே பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டது போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.