Skip to main content

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அதிரடி திருப்பம்

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

covai car issue nia

 

என்.ஐ.ஏ அதிகாரிகளின் விசாரணையில்  இருந்து வரும் கோவை கார்  வெடிப்பு சம்பவத்தில், நாளுக்கு நாள் ஏற்படும் அதிரடி திருப்பங்களால்  தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி  அதிகாலை கோவை மாவட்டம் உக்கடம் அருகே சென்று கொண்டிருந்த கார் வெடித்த  விவகாரம்  நாடு  முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கார் வெடித்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்ட பல வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்பதும் அவரது வீட்டில் 75 கிலோ வெடி பொருட்களை பதுக்கி வைத்து இருந்ததும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தால்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்த நிலையில், அதில் 5 பேரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

 

இதையடுத்து கோட்டைமேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர் சோதனைகளை  நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது செல்போன்கள், சிம்கார்டுகள், ஆவணங்கள் உள்ளிட்ட பல ஆதாரங்கள்  கைப்பற்றப்பட்டன. அதுமட்டுமின்றி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் என ஒரு பட்டியலே வைத்திருந்தனர்.

 

இந்நிலையில், கோவை மாநகரில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த உமர் பாரூக் என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் குன்னூருக்கு குடிபெயர்ந்தார். அவரை நோட்டமிட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், கடந்த மாதம் உமர் பாரூக்கிடம் விசாரணை செய்தனர். வீட்டிலிருந்து சில குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 7 ஆம் தேதியன்று உமர் பாரூக், தௌபிக், பெரோஸ்கான் ஆகிய 3 பேரை அவர்களது வீட்டில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 

இவர்கள் மூவரும் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முபினுக்கு உதவியதாக என்.ஐ.ஏ வட்டாரத்திலிருந்து  தகவல் கசிந்துள்ளது. இச்செய்தி தற்போது கோவை மாநகரில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்; மேற்குவங்கத்தில் என்.ஐ.ஏ. அதிரடி!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
benagaluru hotel incident at west bengal nia

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகியோரின் புகைப்படத்தையும், இவர்கள் இருவர் பற்றிய தொடர்புடைய முழு விபரங்களையும் என்.ஐ.ஏ. வெளியிட்டிருந்தது. அதில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. அதே சமயம் சந்தேகத்தின் பேரில் பாஜக பிரமுகர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். 

benagaluru hotel incident at west bengal nia

இது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 08029510900, 8904241100 என்ற தொலைபேசி எண்களுக்கோ தெரிவிக்கலாம் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர். பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

குண்டுவெடிப்பு வழக்கு; என்.ஐ.ஏ அதிகாரிகள் மீது திடீர் தாக்குதல்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Sudden incident happened on NIA officers on case in west bengal

மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கிழக்கு மேதினிபூர் மாவட்டம் நர்யபிலா கிராமத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ) தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மனபெந்திர ஜனா என்ற நபரை கைது செய்ய என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (06-04-24) காலை புபிதானிநகர் பகுதிக்கு தங்களது வாகனத்தில் சென்றனர். அப்போது அங்கு வந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட கும்பல், என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்த தாக்குதல் சம்பவத்தில், அதிகாரிகளின் வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. மேலும், இந்த தாக்குதலில் என்.ஐ.ஏ அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த அதிகாரியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.