ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க வேண்டும்என்ற கோரிக்கையைஉயர்நீதிமன்றம் நிராகரித்தது வழக்கை ஒத்திவைத்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடந்த 9 ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவில்ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க அரசு சாராத மருத்துவர்களை கொண்ட குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. வழக்கில் தீர்வு காணும் வரை மருத்துவ விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்தவழக்கில் இடைக்கால தடை விதிக்க வேண்டும்என்ற கோரிக்கையைஉயர்நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் இது குறித்து ஆறுமுகசாமி ஆணையம்மற்றும் தமிழக அரசு வரும் வெள்ளிக்கிழமைக்குள்பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கை வெள்ளிக்கிழமை தள்ளிவைத்தது நீதிமன்றம்.