நிர்மலா தேவி விவகாரம்: பேராசிரியர் காவலை நீட்டித்து கோர்ட் உத்தரவு

nirmaladevi

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

nirmaladevi

இந்த விவகாரம் தொடர்பாக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் இன்று விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இவர்கள் இருவரின் நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து நீதிபதி மும்தாஜ் உத்தரவிட்டுள்ளார். வழக்கின் அடுத்த விசாரணை மே 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

court Murugan Nirmaladevi Virudhunagar
இதையும் படியுங்கள்
Subscribe