Skip to main content

மதுரையில் மழைநீர் கால்வாய்களில் தேங்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவு

Published on 27/03/2018 | Edited on 27/03/2018
madurai police

 

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாய்களில் தேங்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.

 


நாளிதழில் வந்த செய்தி அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து பதிவு செய்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி அமர்வின் முன்பு நடைபெற்றது.

 

அந்த விசாரணையில் "மதுரை செல்லூர் பந்தல்குடி மழைநீர் கால்வாயில் தேங்கியுள்ள குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி பந்தல்குடி மழைநீர் கால்வாயிலிருந்து செல்லும் கழிவுநீர் வைகை ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் , ஆழ்வார்புரத்திலுள்ள கழிவுநீர்குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்வதை தடுக்க உடைந்த குழாயை மாற்றி கழிவுநீர் வெளியேறுவதை சரி செய்ய வேண்டும் . 

 

அதே போல் மதுரை ஆரப்பாளையம் பேருந்துநிலையம் பின்புறம் பொன்னகரம் மழைநீர் கால்வாயில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நீக்கி தூர்வாரததால் , மழைநீர் கால்வாய்களிலிருந்து தேங்கிய கழிவுநீர் சாலைகளில் செல்கின்றது . இதனால் அந்த பகுதிகளில் குடியிருப்போருக்கு பாதிப்பு ஏற்படுகின்றது . அதே போல் அந்த கால்வாயில் பாதுகாப்பற்ற முறையிலுள்ள மரப்பாலத்தால் கடந்த ஓராண்டில் 3 பேருக்கு மேல் கால்வாயில் விழுந்துள்ளனர். இது குறித்து கவுன்சிலர் முதல் மாநகராட்சி ஆதிகாரிகள் வரை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என நாளிதழ் செய்தியை சுட்டிகாட்டிய நீதிபதிகள் ,  சம்மந்தப்பட்ட செல்லூர் பந்தல்குடி கால்வாய் , ஆழ்வார்புரம் கழிவுநீர் குழாய் , பொன்னகரம் கால்வாய் என வைக் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது , கால்வாயில் தேங்கிய கழிவுநீர் அகற்ற கால்வாய் தூர்வாருவது , சாலையில் கழிவுநீர் செல்லாமல் குழாய் உடைப்பை சரி சாய்வது என , மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பணியை துவக்கி தூர்வாருவதுடன் , மரப்பாலத்தை அகற்றி பாதுகாப்பான பாலம் அமைத்து 7 நாட்களில் அறிக்கையை புகைப்பட ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்பிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபேனர்ஜி மற்றும் நீதிபதி ராஜமாணிக்கம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

 

பிளாஸ்டிக் கழிவுகளை போடுபவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன் , கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும்  அந்த உத்தரவில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது . 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.