(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கொடநாடு கொலை வழக்கில் வாலையார்மனோஜையும், சயானையும் தமிழக போலீசார்நேற்றுகைது செய்துள்ள நிலையில் இன்று இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் மார்ச் 4 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சயான் மற்றும்மனோஜைகைது செய்ய வேண்டும் என கோத்தகிரி நீதிமன்றம் கொடுத்த உத்தரவை அடுத்து அவர்களை கைது செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, அதை மீறி மனோஜையும், சயானையும் நேற்று தமிழக போலீசார் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ளநெடுஜாலாகூடாவில் உள்ளஅவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரும்இன்றுஉதகை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் இருவரையும்வரும் மார்ச் 4 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீலகிரி முதன்மை அமர்வுநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.