Skip to main content

மூதாட்டியை வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை சிறை

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

court has sentenced the person who incident  old women to life in prison

 

விழுப்புரம் மாவட்டம் ஒட்டநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி ஒருவர். இவர் வீட்டில் தனியாகப் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்தார். அதே ஊரைச் சேர்ந்த பொக்லிங் டிரைவரான 26 வயது கவிதாஸ் என்ற இளைஞன் மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய, அவர் சத்தம் போடவே ஆத்திரமடைந்த கவிதாஸ் தான் வைத்திருந்த கத்தியால் மூதாட்டியின் கழுத்தில் குத்திக் கொலை செய்துவிட்டு, அவர் இறந்த பிறகு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

அந்த நேரத்தில் பாட்டி வீட்டிலிருந்து சத்தம் வரவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அந்த இடத்திலிருந்து தப்பித்து கவிதாஸ் ஓடியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி தேதி நடந்தது. இந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் மகன் முனியப்பன் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி சாந்தி குற்றச்சாட்டப்பட்ட கவிதாசுக்கு  தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் கவிதாஸ் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், அதோடு 3000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

 

இதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கவிதாஸ் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார். மூதாட்டி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கவிதாஸ் கண்டமங்கலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கலத்திராம்பட்டு பகுதியில் வயதான அக்கா, தங்கை இருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு அவர்களிடமிருந்து நகையைத் திருடிச் சென்றவர். இது சம்பந்தமாகவும் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல் இவர் எட்டு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் இது சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் தரப்பில் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.