Skip to main content

மூதாட்டியை வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை சிறை

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

court has sentenced the person who incident  old women to life in prison

 

விழுப்புரம் மாவட்டம் ஒட்டநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி ஒருவர். இவர் வீட்டில் தனியாகப் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்தார். அதே ஊரைச் சேர்ந்த பொக்லிங் டிரைவரான 26 வயது கவிதாஸ் என்ற இளைஞன் மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய, அவர் சத்தம் போடவே ஆத்திரமடைந்த கவிதாஸ் தான் வைத்திருந்த கத்தியால் மூதாட்டியின் கழுத்தில் குத்திக் கொலை செய்துவிட்டு, அவர் இறந்த பிறகு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

அந்த நேரத்தில் பாட்டி வீட்டிலிருந்து சத்தம் வரவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அந்த இடத்திலிருந்து தப்பித்து கவிதாஸ் ஓடியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி தேதி நடந்தது. இந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் மகன் முனியப்பன் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி சாந்தி குற்றச்சாட்டப்பட்ட கவிதாசுக்கு  தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் கவிதாஸ் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், அதோடு 3000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

 

இதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கவிதாஸ் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார். மூதாட்டி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கவிதாஸ் கண்டமங்கலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கலத்திராம்பட்டு பகுதியில் வயதான அக்கா, தங்கை இருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு அவர்களிடமிருந்து நகையைத் திருடிச் சென்றவர். இது சம்பந்தமாகவும் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல் இவர் எட்டு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் இது சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் தரப்பில் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.