Skip to main content

சட்ட புத்தகத்தை புரட்டும் நளினி-ஆஜராவது குறித்து அரசு பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார் நளினி. இவரது கணவர் முருகனும் அதே வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார். 

 

nalini

 

நளினி தனது மகள் அரித்திரா திருமணத்துக்காக 6 மாத பரோல்‌ கேட்டு சில மாதங்களுக்கு முன்பு தமிழகரசுக்கு மனு தந்துயிருந்தார். அதிமுக அரசாங்கம் அதனை பரிசீலனை கூட செய்யாமல் வைத்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில், அந்த வழக்கில் தானே வாதாட முடிவு செய்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். அதனை அவர்கள் பரிசீலனை செய்யவில்லை. 

 

 

இந்நிலையில், தனது வழக்கில் தானே ஆஜராகி கருத்துக்களை எடுத்துவைக்க விரும்புகிறேன், அதற்காக என்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறை மற்றும் சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும்மென நளினி சார்பில்  ஆட்கொணர்வு மனு‌ தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது நேற்று  ஏப்ரல் 15ந்தேதி விசாரணை மேற்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் , இதுகுறித்து  தமிழக  அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

நீதிமன்றத்தில் அதிமுக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்கிற எதிர்ப்பார்ப்பு தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் தானே வாதாட சிறையில் பல சட்ட புத்தகங்களை படித்துள்ள நளினி அதற்காக பல குறிப்புகளையும் எடுத்து வைத்துள்ளார். தனது கணவரிடமும் ஆலோசனை பெற்றுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாந்தன் மரணம்; கலங்கி கண்ணீர் சிந்திய நளினி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (28-02-24) அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு,  மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், சீமான், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள்  அஞ்சலி செலுத்தினார்கள்.
 

Next Story

பரோலில் வெளியே வரும் கைதிகளைக் கண்காணிக்க ‘ஜிபிஎஸ்’ கருவி; உள்துறை அமைச்சகம் அனுமதி

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

'inistry of Home Affairs permission to GPS'device to track prisoners

 

கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி சிறைத்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் குழு, மத்திய உள்துறையிடம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், ‘ஜாமீனில் விடுதலையாகும் சிறைக் கைதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவியைப் பொறுத்தலாம்’ என்று பரிந்துரை செய்தது. இது தொடர்பான நடவடிக்கையை காஷ்மீர் போலீசார் உடனடியாக அமல் செய்தனர். இந்த நிலையில், அனைத்து மாநிலங்களில் உள்ள சிறைவாசிகள் பரோலில் வெளியே வந்தால் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவியைப் பயன்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

 

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறையில் அடைக்கப்பட்டுள்ள கடும் குற்றங்கள் செய்த குற்றவாளிகளை மற்ற குற்றவாளிகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். தற்காலிக விடுதலை அல்லது பரோலில் வெளியே வரும் கைதிகளைக் கண்காணிக்கும் வகையில் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படலாம். அதேபோல், கைதிகள் தங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க இத்தகைய கருவியை அணிய வேண்டும் என்று விரும்பினால் சிறையிலிருந்து அவர்களுக்கு விடுப்பு அளிக்கலாம். 

 

சிறையிலிருந்து வெளியே சென்ற பிறகு அந்தக் கருவியை அகற்றினால், எதிர்காலத்தில் வழங்கப்படும் எந்தவொரு சிறை விடுமுறையையும் அந்த கைதிகளுக்கு வழங்கப்படுவதை ரத்து செய்யலாம். எனவே, பரோலில் விடுவிக்கப்படும் கைதிகளைக் கண்காணிக்கும் வகையில் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகளை அந்தந்த மாநில அரசுகள் பொறுத்தலாம்” என்று தெரிவித்துள்ளது.