Skip to main content

ஒருகிணைந்த ஆட்சியர் அலுவலகம் கட்ட அனுமதி அளித்துள்ளது நீதிமன்றம்..!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

Court gives permission to build a joint collector's office

 

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் என 2019ம் ஆண்டு பிரிக்கப்பட்டு தனியாக உதயமானது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாவட்டத்திற்கு என ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு 2020 ஆண்டு நவம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டதோடு இதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி நகரிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ளது வீரசோழபுரம் என்ற கிராமம். இங்குள்ள அர்த்தநாரிஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதை அறிந்த சிவனடியார்கள் கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டக்கூடாது என்றனர். மேலும் சந்தை மதிப்பில் மேற்படி கோயில் நிலவிலை அதிகம், ஆனால் அரசோ குறைந்த  குத்தகை  அடிப்படையில்  கோயில் நிலத்தில்  ஆட்சியர் அலுவலகம் கட்ட உத்தரவிட்டது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

 

இதையடுத்து உயர் நீதிமன்றம் வழக்கு முடியும் வரை அலுவலகக் கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதிகள் செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் நிலத்தை அரசு குத்தகைக்கு எடுப்பது சம்பந்தமாக மதிப்பீடுகளை மாவட்ட நீதிபதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இந்தக் குழு அளித்த அறிக்கைக்கும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட மதிப்புக்கும் இடையே பெரிய அளவில் குத்தகைத் தொகை சம்பந்தமான வேறுபாடு இருந்துள்ளது. அதனால் பாரத ஸ்டேட் வங்கி மதிப்பீட்டாளர்கள் மூவரின் பெயரை மதிப்பீடு செய்வதற்கு பரிந்துரைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது வங்கி தரப்பில் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன அதில் ஒருவரை மதிப்பீட்டாளாராக நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

 

மதிப்பீட்டாளர் ஆய்வு மேற்கொள்ளும்போது மனுதாரர் மற்றும் அரசு பிரதிநிதி உடனிருக்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வாடகை தொகை நிர்ணயம் தொடர்பான பிரச்சினை மட்டுமே இருப்பதனால் கட்டுமானப் பணிக்கான தடையை நீக்கும்படி அரசின் அட்வகேட் ஜெனரல் விஜயநாராயண் கோரினார். இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. டெண்டர் நடைமுறை சுற்றுச்சூழல் அனுமதி குறித்து மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதைப் பதிவு செய்த முதல் பெஞ்ச் உரிய துறைகளில் ஒப்புதல் அனுமதி பெற்று கட்டிடப் பணிகளை மேற்கொள்ள அரசுக்கு அனுமதி அளித்துள்ளது உயர் நீதிமன்றம். பின்னர் விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்தில் ஒத்திவைத்துள்ளது உயர் நீதிமன்றம். இதன் மூலம் பாரத ஸ்டேட் வங்கியின் மதிப்பீட்டாளர்கள் குழு ஆய்வு செய்து பரிந்துரைக்கும் குத்தகை நிர்ணயத்தை நீதிமன்றம் ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்கும் நிலை உள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. எனவே அதற்காகக் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்கத் தேவையில்லை பணிகளை தொடரலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.