Skip to main content

நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை..! 

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

Court employee jailed for 10 years

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம், மணலூரைச் சேர்ந்தவர் அன்பழகன் (57). இவரது மனைவி ராஜேஸ்வரி (49). இவர்களின் மகன் பிரபு (25). இவர் 24 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பெண் கருத்தரித்துள்ளார். அப்போது வேலை இல்லாமல் இருந்ததால் வேலை கிடைத்ததும் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும், கருவைக் கலைக்குமாறும் பிரபு கூறியுள்ளார். அதன்படி அந்தப் பெண் கருவைக் கலைத்துள்ளார்.

 

அதன் பின்னர், பிரபுவுக்கு நீதிமன்றத்தில் வேலை கிடைத்துள்ளது. அதனால் அப்பெண், திருமணம் செய்துகொள்ளுமாறு பிரபுவிடம் கேட்டுள்ளார். ஆனால் பிரபு, திருமணம் செய்ய மறுத்ததுடன் ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் கடந்த 2017ஆம் ஆண்டு அப்பெண் விஷ விதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால், நல்வாய்ப்பாக அவர் மீட்கப்பட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் குணமடைந்தார். அப்போது, பெண்ணைக் காதலித்து கருவுறச்செய்து, தற்கொலைக்குத் தூண்டியதாக பிரபு மீது பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க தீர்மானித்தனர்.  ஆனால், பிரபு மீது அப்போது வழக்குப் பதிவுசெய்தால் அரசு வேலைக்கு ஏதாவது ஆபத்து நேரிடும் எனவும் மூன்று மாதத்திற்குப் பிறகு திருமணம் செய்துவைப்பதாகவும், எனவே புகார் செய்ய வேண்டாம் என்றும் பிரபுவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

 

அதனை நம்பிய அந்தப் பெண் வீட்டார் புகார் அளிக்கவில்லை. அதன்பிறகு பிரபு வீட்டார் தெரிவித்ததுபோல் சில மாதங்கள் கழித்து அப்பெண் வீட்டார், பிரபு வீட்டிற்குச் சென்று திருமணம் குறித்துப் பேசியுள்ளனர். அப்போது பிரபுவின் பெற்றோர், அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

 

அதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 10.11.2017 அன்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து பிரபுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் அரசு வழக்கறிஞர் செல்வபிரியா வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன், காதலித்து ஏமாற்றி, கருவைக் கலைத்த நீதிமன்ற ஊழியர் பிரபுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 55 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த பிரபுவின் பெற்றோர் அன்பழகன், ராஜேஸ்வரி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.