Skip to main content

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு நீதிமன்றம் தடை! மீறி போராடுவார்களா தொழிலாளர்கள்!?

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலைய பகுதிகளில் பல ஆண்டுகளாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், பஞ்சப்படி, வீட்டு வசதி, மருத்துவ சேவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவை என்.எல்.சி நிர்வாகம் செயல்படுத்தவில்லை.

 

Court bans NLC contract workers' strike Workers


இந்நிலையில்  தொ.மு.ச,  சி.ஐ.டி.யு,  பா.தொ.ச, தொ.வா.ச, ஐ.என்.டி.யூ.சி, தொ.வி.மு, இண்ட்கோசெர்வ் சங்கம்  உள்ளிட்ட 7 சங்கங்களை சேர்ந்த என்.எல்.சி ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் நிர்வாகத்துடன் நீண்டநாள் கோரிக்கை வைத்து பேச்சு வார்த்தை நடத்தியும், கோரிக்கைகளை என்.எல்.சி நிர்வாகம்  ஏற்காததால் கடந்த 11.02.2020 அன்று  என்.எல்.சி  நிர்வாகத்திடம் வேலை நிறுத்த அறிவிக்கை  வழங்கினர். என்.எல்.சி நிர்வாகம் வருகின்ற 25-ம் தேதிக்குள்  தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் கோரிக்கைகளை  ஏற்காவிட்டால் 25 -ஆம் தேதி நள்ளிரவு பணி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர். இதேபோல் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பிலும் வேலை நிறுத்த அறிவிக்கை அளிக்கப்பட்டது.

அதையடுத்து மத்திய உதவி தொழிலாளர் ஆணையர் கணேசன் முன்னிலையில் புதுச்சேரியில் என்.எல்.சி அதிகாரிகள்,  தொழிற்சங்க கூட்டமைப்பினருடன் கடந்த 19-ஆம் தேதி முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் நேற்று ஏ.ஐ.டி.யுசி  ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினை உதவி தொழிலாளர் நல ஆணையர் பேச்சுவார்த்தைக்கு  அழைப்பு அனுப்பப்பட்டிருந்த நிலையில் நேற்று பேச்சுவார்த்தைக்கு என்.எல்.சி நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதனால் அதிருப்தியடைந்த ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் 480 நாட்கள் பணிபுரிந்த அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் உடனடியாக பணிநிரந்தரம் செய்திட வேண்டும், ஒரே வேலையை செய்திடும் தொழிலாளர்களுக்கு இருவேறு ஊதியம் வழங்குவதை தவிர்த்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.

 

Court bans NLC contract workers' strike Workers

 

இதனிடையே வேலை நிறுத்தத்திற்கு தடைவிதிக்க என்.எல்.சி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தை அனுகியது. அதன் பேரில் வேலை நிறுத்தத்தை தொடங்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் பேச்சுவார்த்தை மூலம் சமரச தீர்வு காண வேண்டும் என்றும், வேலை நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் உதவி தொழிலாளர் நல ஆணையரும் தொழிற்சங்கங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதேசமயம், ‘ என்.எல்.சி நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களின்   நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும், பணி நிரந்தரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவதிலும் அக்கறை காட்டுவதில்லை. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை என இழுத்துக்கொண்டே, மற்றொரு புறம் நீதிமன்றம் மூலம் போராட்டத்துக்கு தடை வாங்குவதை என்.எல்.சி நிர்வாகம் வழக்கமாக கொண்டுள்ளது. இந்த தடை ஆணையை சட்ட வல்லுனர்களின் உதவியுடன் எதிர் கொள்வோம். 25-ஆம் தேதிக்குள் நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால் திட்டமிட்டபடி வேலை  நிறுத்தத்தில் ஈடுபடுவோம்’ என்கிறார் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடங்கும் நிலையில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான மின் விநியோகம் பாதிக்கப்படும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது