Skip to main content

தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த நீதிமன்றம் அனுமதி...!!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

தஞ்சையில் உள்ள பெரியக்கோவிலுக்கு நடத்தப்பட இருக்கும் குடமுழுக்கு விழாவை தமிழில் மட்டும் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்புகளில் இருந்து கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. மேலும் வழக்குகளும் தொடுக்கப்பட்டிருந்தது. 

 

Court allows Tamils ​​in Sanskrit in thanjai periyakovil

 

குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன், பெ.மணியரசன் உள்ளிட்ட பலர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நேற்றே இது தொடர்பான வழக்குகளில் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

கடந்த 28 ஆம் தேதி நடந்த விசாரணையில் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் குடமுழுக்கு விழாவை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பதிலளிக்கப்பட்டது. இதனை பிரமாணபத்திரமாக தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
 

இந்நிலையில் இன்று நடந்த விசாரணையில் தஞ்சை பெரியக்கோவிலுக்கு தமிழில் மட்டும் குடமுழுக்கு  நடத்த வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, அறநிலையத்துறை அளித்த பதில்படி தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு நடத்த  அனுமதி அளித்தார். இந்து சமய அறநிலையத்துறை அளித்த அறிக்கைபடி குடமுழுக்கை நடத்தி அறிக்கை அளித்திட நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.      

 

 

சார்ந்த செய்திகள்