Skip to main content

நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்!

Published on 15/08/2022 | Edited on 15/08/2022

 

The country's 75th Independence Day celebration is a riot!

 

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

 

நாட்டின் மிக முக்கிய கட்டிடங்கள் தேசிய கொடியின் மூவர்ணத்தில் ஜொலித்தன. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம், குடியரசுத் தலைவர் மாளிகை செங்கோட்டை, மும்பையின் இந்தியா கேட் ஆகிய கட்டிடங்கள் மூவர்ணத்தில் ஜொலித்தன. உச்சநீதிமன்ற கட்டிடம், சென்னையில் உள்ள தலைமைச் செயலகம், விமான நிலையம், சென்னை மாநகராட்சி கட்டிடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என அனைத்து பகுதிகளும் தேசியக் கொடியின் மூவர்ண விளக்குகளால் அழகு படுத்தப்பட்டுள்ளன.

 

உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹாலும் தேசியக் கொடியின் வண்ணத்தில் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்தியத் தலைநகர் டெல்லியில் 'ஒவ்வொருவர் கையிலும் தேசியக்கொடி' என்ற முழக்கத்துடன் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவங்கி வைத்தார். இப்படி இந்தியாவின் கர்நாடகா, மேற்குவங்கம், காஷ்மீர் உள்ளிட்ட பல இடங்களில் இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தது ‘2024’ புத்தாண்டு; நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Born '2024' New Year Kolakala celebration all over the country

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று மாலை முதலே களைகட்டி வந்தது. இதனையொட்டி உலகின் முதல் நாடாக இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தை தொடர்ந்து உலகின் 2 ஆவது நாடாக ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 06.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது.

அதே சமயம் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள், விமான நிலையங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள், கோயில்கள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியை எட்டியதில் இருந்து புத்தாண்டை நாட்டின் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பட்டாசு வெடித்து வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு பிறப்பையொட்டி கோயில்கள், தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது. நக்கீரன் வாசகர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

Next Story

ஆஸ்திரேலியாவில் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்!

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
People welcomed the New Year with spectacular sky fun in Australia

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இதனையொட்டி உலகின் முதல் நாடாக இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக நியூசிலாந்தின் ஆக்லாந்து, வெலிங்டன் நகரில் மக்கள் உற்சாகமாக வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நியூசிலாந்தை தொடர்ந்து உலகின் 2 ஆவது நாடாக ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்துள்ளது. இந்திய நேரப்படி மாலை 06.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்துள்ளது. சிட்னி நகரில் மக்கள் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை ஆஸ்திரேலிய மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.

அதே சமயம் இந்தியாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.