Skip to main content

ரத்தம் கக்கி இறந்த நாட்டுக் கோழிகள்! போலீஸார் தீவிர விசாரணை!

Published on 22/07/2021 | Edited on 22/07/2021
Dead country chickens with blood in their mouths! Police who came and visited

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பெரும்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். தனது வீட்டுக்கு அருகே நாட்டுக்கோழிகளையும் 10 சண்டை கோழிகளையும் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் கோழிகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் இருக்கும். கோழி வளர்ப்பதற்காகத் தனியாகக் கூண்டுகள் உள்ளிட்டவற்றையும் அமைத்து கோழி வளர்ப்பில் ஈடுபடுகிறார். 

 

பகல் நேரங்களில் அவரது தோட்டத்தில் கோழிகள் மேய்ச்சலுக்குச் செல்லும், இரவு நேரங்களில் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும். இப்படி வளர்த்து வந்த நாட்டுக் கோழிகளை இறைச்சிக்காக விற்பது வாடிக்கை. மேலும், நாட்டு மருத்துவத்திற்காக அந்த கோழிகளின் முட்டைகளை அப்பகுதி மக்கள் வாங்கிச் செல்வார்கள். இப்படி வளர்க்கப்பட்டு வந்த கோழிகளில் 50க்கும் மேற்பட்ட கோழிகள் நேற்று வாயில் ரத்தம் கக்கியவாறு அடுத்தடுத்த இறந்து விழுந்துள்ளன. இதனால் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

 

மேலும், கோழிகள் இறந்து கிடந்த பகுதியில் கறித்துண்டுகள் (மாமிசம்) சிதறிக்கிடந்துள்ளன. இதை சுரேஷ் குடும்பத்தினர் கண்டெடுத்துள்ளனர். இதனால் அந்த கறித்துண்டுகளில் ஏதாவது விஷம் தடவி வேண்டுமென்றே யாரோ கோழிகளைக் கொல்வதற்குக் கொண்டுவந்து போட்டு விட்டுப்போய் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் திருநாவலூர் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சடைய பிள்ளை, தலைமையிலான காவல்துறையினர் கோழிகள் இறந்து கிடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், முன்விரோதம் காரணமாகக் கோழிகளைக் கொல்லப்பட்டதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோழிகள் திடீர் இறப்புக்கு என்ன காரணம் என்பதை அறிய கால்நடை மருத்துவர் இந்த கோழிகளைப் பிரேதப் பரிசோதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.