Skip to main content

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தால் ஊழல் மந்திரிகள் சிறை செல்வது உறுதி-உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

Published on 05/10/2018 | Edited on 05/10/2018

கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கோவை மாவட்டம்,  பணப்பெட்டி கிராமத்தில் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் புகார்களை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.  கலெக்‌ஷன் - கமிஷன் -  கரப்ஷனில் ஈடுபடும் ஊழல் அதிமுக அரசை கண்டித்து, கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற  இக்கூட்டத்தில் முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

 

Udhayanidhi Stalin

 

அப்போது அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் இன்று ஊழல் அதிமுக அரசை கண்டித்து பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றது. இதற்கு அனுமதி வழங்கவில்லை. நீதிமன்றம் சென்றுதான் அனுமதி பெற்றுள்ளோம். இதற்கு எடப்பாடிக்கு நன்றி,  தலைவர் கலைஞரின் மறைவிற்கு பிறகு கூட நீதிமன்றம் சென்றுதான் அவரது இடத்தை பிடித்தோம்.  எடப்பாடி எப்போதும், அம்மாவின் ஆட்சி நடைபெறுகின்றது என்று சொல்கின்றார். ஒருவேளை அந்தம்மா இப்போது இருந்திருந்தால், இவர்கள் சிறையில் தான் இருந்திருப்பார்கள். இப்போது உள்ள அதிமுக அமைச்சர்கள் வீடு புகுந்து திருடவில்லை. அந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடைபெறுகிறது. விரைவில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஊழல் அமைச்சர்கள் சிறை  செல்வார்கள்.  இங்குள்ள உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி அல்ல ஊழல் மணி. இவர் கோவையில் உள்ள 8 குளங்களில் உள்ள ஆகாயதாமரைகளை அகற்றுவதாக கூறி பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். இதை பொதுபணித்துறை வந்து பார்த்தபோது தான்  இங்கு பணியே நடைபெறவில்லை என்றும், அவர்கள் கூறியதில் ஒரு குளத்தையே காணவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

 

Udhayanidhi Stalin

 

தமிழகத்தில்  38,000 போராட்டத்திற்கு நாங்கள்தான் அனுமதி  வழங்கியுள்ளோம் என எடப்பாடி கூறுகின்றார்.  

மக்கள் நிம்மதியாக இல்லை என்பதால்தான் போராட்டங்கள் நடைபெறுகிறது. இந்த அறிவு கூட இல்லாதவராக உள்ளனர். எடப்பாடி ஒரு கூட்டத்தில் தலைவர் குறுக்கு வழியில் வந்ததாக கூறியுள்ளார். நீங்கள் எப்படி இருந்தீர்கள் என அனைவருக்குமே தெரியுமே, சசிகலாவின் காலை பிடித்து வந்தவர்கள். தலைவர் கலைஞரே, தலைவரை பற்றி கூறியுள்ளார் உழைப்பு உழைப்பு என்று. வாரிசு அரசியல் என  திமுகவை கூறுவது சரியல்ல. நான் அரசியலுக்கு வந்தது தலைமை பொறுப்பை ஏற்பதற்கு அல்ல கடைசி தொண்டனுக்கு தோள் கொடுப்பதற்காக என பேசினார். இதைத்தொடர்ந்து, மணிமாறன் வீரவாளை உதயநிதி ஸ்டாலினுக்கு பரிசளித்தார்.

 

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் மு.கண்ணப்பன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ, மாநில மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் எம்எல்ஏ,  மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர், நெல்லிக்குப்பம் புகழேந்தி எம்எல்ஏ,  மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பைந்தமிழ்பாரி, தமிழ்மணி  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.