Skip to main content

சிக்கவைக்கப்பட்ட பணியாளர்கள்... சிக்காத அதிகாரிகள்... அண்ணாமலையார் கோயிலில் ஊழலோ ஊழல்

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தமிழகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் புகழ்பெற்றது. ஒவ்வொரு பௌர்மணி தோறும் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து கிரிவலம் செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வந்து அண்ணாமலையார் – உண்ணாமலையம்மனை வணங்கிவிட்டு செல்கின்றனர்.

கோயிலுக்குள் சுவாமிகளை வணங்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்னு கட்டணம்மில்லா பொது தரிசனம், அடுத்ததாக ஒருவருக்கு 50 ரூபாய் என்கிற கட்டண தரிசனம். பக்தர்கள் தங்கள் வசதிக்கு தகுந்தார்போல் இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அதன்படி தரிசனம் செய்வார்கள். இதில் கட்டண தரிசனத்தில் மோசடி நடந்துயிருப்பதாக குற்றம்சாட்டி யானை பராமரிப்பாளர் சிங்காரம், இரவு காவலர் பிரேம்குமார் என்கிற இரண்டு தொகுப்பூதிய பணியாளர்களை தற்காலிகமாக நீக்கியுள்ளார் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன்.

 

Corruption at the Annamalayar temple

 

கோயில் யானை ருக்கு இறந்து இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்டது. அதனால் யானை பராமரிப்பாளராக இருந்த சிங்காரத்தை வேறு பணிகளில் பயன்படுத்திவந்துள்ளனர். அப்படித்தான் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கட்டண மையத்தில் பணியில் இருந்தபோது, கட்டண தரிசனம் செல்லும் பக்தர்களிடம் தலைக்கு 50 ரூபாய் என பணம் வாங்கிக்கொண்டு அதற்கான ரசீது தராமல் அனுப்பியதை ஆய்வின்போது கண்டறிந்து விசாரணை நடத்தி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார் என்கிறார்கள்.

இதுப்பற்றி கோயில் பணியாளர்களிடம் விசாரித்தபோது இன்னும் சில தகவல்களை கூறுகின்றனர். கட்டண ரசீது வழங்கும் இடத்தில் யார் அமர்வது என்பதை கோயில் மணியக்காரர், கண்காணிப்பாளர், மேலாளர் இணைந்து தான் முடிவெடுத்துள்ளார்கள். சிங்காரம் கோயிலுக்கு வரவேண்டிய வருவாய்யை ஏமாற்றினார்கள் எனச்சொல்கிறார்களோ, அதை விட அதிக பங்கு கோயிலில் உள்ள நிரந்தர பணியாளர்கள், அதிகாரிகள் வேறு சிலருக்கு உள்ளது. அவர்கள் தான் இப்படிப்பட்ட போர்ஜரி வேலையை செய்து பணத்தை கொள்ளையடித்துவர்கள், விவகாரம் பெரியதாக ஆனதும் இவர்களை சிக்கவைத்துவிட்டு அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். இரவு காவலாளி பிரேம்குமார் எப்படி பகலில் வந்து கட்டணம் வசூலிக்கும் அறையில் அமர்ந்தார் என்கிற கேள்வி எழுகிறது.

அதேபோல், ரசீது வழங்கினார்களா இல்லையா என்பதை கண்காணிக்க நுழைவாயிலில் ஒரு பணியாளர் இருப்பார். அவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணியை சரியாக செய்யாத அவரும் தானே குற்றவாளி என கேள்வி எழுப்புகின்றனர்.

 

Corruption at the Annamalayar temple

 

பக்தகளுக்கு வழங்கிய கட்டண ரசீதில் மட்டும் மோசடி நடத்தி பணத்தை கொள்ளையடிக்கவில்லை. பலப்பல மோசடிகள் நடத்தி கோயில் வருமானத்தை கொள்ளையடிக்கிறார்கள். கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான பொருட்கள் வாங்குவதில், பக்தர்களிடம் நிதி வாங்குவதிலும் பெரும் மோசடி நடைபெறுகிறது. அதை விட முக்கியம் 100 பேருக்கு அன்னதானம் எனச்சொல்லிவிட்டு 50 பேர்க்கு தான் போடுகின்றனர். இதில் மற்றொரு கூத்து என்னவென்றால், அதற்கான டோக்கனை கூட 30 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதில் முக்கிய பங்கு கோயிலில் உள்ள முருகனின் மற்றொரு பெயர் கொண்ட அதிகாரிக்கு செல்கிறது.

அதுமட்டும்மல்ல கோயில் எதிரே பலரும் தேங்காய்கடை, பூ கடை என வைத்துள்ளனர். இவர்களிடம் கோயிலின் முன்னால் பணியாளரும், தற்போது ஆளும்கட்சியின் சப்போட்டில் உள்ளவரான அந்த நபர், கோயில் முன் கடை வைத்துள்ளவர்களிடம், நீங்க இங்க கடை வைக்கனும்ன்னா அட்வான்ஸ் தரனும், கடையை காலி செய்யறப்ப அதை திருப்பி தந்துவிடுவன். தரமாட்டன்னு சொன்னா உங்களை இங்கயிருந்து காலி செய்யவச்சிடுவன் என்னோட ஆளும்கட்சி பவர் தெரியும் தானே என மிரட்ட ஒவ்வொருவரும் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அட்வான்ஸ் தந்துள்ளனர். அந்த பணத்தை வாங்கி ராசி வட்டிக்கு வெளியே கடன் தந்துள்ளார் அந்த நபர். பணம் தந்தவர்கள் சிலர் தங்களது தேவைக்காக பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். பணத்தை நான் தரும்போது தருவன், பணத்தை தாங்கன்னு நச்சரிச்சி, உங்களை இங்க கடை வைக்கவிடமாட்டன் எனச்சொல்லியுள்ளார். அப்படி சொல்லியும் அந்த வியாபாரிகள் பணத்தை கேட்க, இரண்டு இரும்பு கேட்களை போட்டு அவர்களது வியாபாரத்தை முடக்கியுள்ளார். கோயிலில் உள்ள இந்த இணை ஆணையரும் எதுக்கு அங்க இரண்டு கம்பி தடுப்பு என கேட்கவில்லை என்கிறார்கள்.
 

Corruption at the Annamalayar temple

 

அதேபோல், கோயில் எங்களுக்கே சொந்தம் என்கிற ரீதியில் செயல்படும் முக்கிய சிவாச்சாரியர்கள் குடும்பத்தின் இளைஞன், ஒரு விஐபி குடும்பம் வந்தால் அமர்வு தரிசனம் செய்யவைக்க 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வாங்குகிறான். அந்த பையன், 5 பேர் வந்தால் 2 பேர்க்கு மட்டும்மே சிறப்பு தரிசன ரசீது வாங்கிக்கொண்டு உள்ளே அழைத்து செல்கிறான். இதுப்பற்றி தெரிந்தும் அதிகாரிகள் கேள்வி எழுப்புவதில்லை. காரணம் அவர்களுக்கு பங்கு போய்விடுகிறது.

இரண்டு ஆண்டுக்கு முன்பு மகாதீபத்துக்கே கோயிலில் பூ அலங்காரம் செய்யவந்த ஒருவரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டி அவர் அலங்காரம் செய்யாமல் போய்விட்டார். இத்தனைக்கும் அவர் இலவசமாக தான் வருடாவருடம் பூ அலங்காரம் செய்துவந்தார். கோயில் அதிகாரிகள், நிர்வாகம் சார்பில் செய்ததாக பணம் எடுத்துக்கொண்டுயிருந்தார்கள். இப்போது கூட கார்த்திகை தீபத்திருவிழா பணிகள் தொடங்கியுள்ளது. கோயில் பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு இந்த செலவை நீங்க ஏத்துக்குங்க அப்படின்னு சொல்லி ஒரு கும்பல் விஐபி பக்தர்களிடம் பணத்தை வசூலித்து வருகிறது. உண்மையில் இந்த தொகையெல்லாம் கோயில் கணக்கில் வருவதேயில்லை.
 

இப்படி கோயிலை வைத்து கொள்ளையடித்தபடியே இருக்கிறார்கள் சில கோயில் பணியாளர்கள், அதிகாரிகள், சிவாச்சாரிகள் இதனை கண்டுக்கொள்ளாமல் கண் துடைப்புக்காக இப்படி நடவடிக்கை எடுத்துள்ளோம் எனக்காட்டுகிறார்கள் என்றார்கள்.

சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். இவர்கள் விட்டால் சிவன் சொத்துக்களை மட்டும்மல்ல சிவானான அண்ணாமலையாரையே விற்பனை செய்துவிடுவார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.112 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்; இறால் பண்ணையை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வெளிவயல் கிராமத்தில் உப்பளம் நடத்த அரசு நிலத்தை குத்தகைக்கு பெற்று அந்த நிலத்தில் பலர் சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தி வருகின்றனர். இதற்காக தவறான முகவரிகள் கொடுத்து மின்சாரம் பெற்று நடத்தி இருக்கின்றனர். இது போல உப்பளம் நடத்த அனுமதி பெற்ற ஒரு இறால் பண்ணையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஸ்டம்ஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் லேகியம் மற்றும் 874 கிலோ கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றி அதே இடத்தில் இருந்த சாராய ஊறலையும் அழித்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களை சரக்கு வாகனத்தில் அள்ளிச் சென்றனர்.

இது சம்பந்தமாக 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வரும் நிலையில், இந்த கடத்தலில் மேலும் பல பெரும்புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை புதன் கிழமை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

இந்த நிலையில் வியாழக்கிழமை(14.3.2024) ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் மார்டின் லூதர் கிங், மீன்வளத்துறை உதவி இயக்குநர் பஞ்சராஜா, சாதிக் பாட்சா, கனகராஜ் ஆகியோர் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூடி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகையை பொக்லின் இயந்திரம் மூலம் உடைத்து தரைமட்டமாக்கினர். மேலும் இறால் பண்ணை கரைகள் உடைக்கப்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணை ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது பண்ணை குட்டைகளில் இறால் குஞ்சுகள் விட்டிருப்பதால் 2 மாதம் அவகாசம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் பேசி அவகாசம் பெற்றுள்ளனர். பரபரப்பான சூழ்நிலையில் கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி கௌதமன் தலைமையிலான ஏராளமான போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர்.

Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

அப்பகுதி பொது மக்கள் கூறும் போது.. கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணைக்குட்டை பற்றி உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிந்தே கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இப்போது அந்தக் கொட்டகை அடையாளமாக இருக்கக்கூடாது என்பதற்காக இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர். இது போன்ற இடங்களுக்கு ஆலங்குடியில் இருந்து ஒரு பெண் காவல் அதிகாரி அடிக்கடி வந்து செல்வார். அவருக்கு தெரியாமலா இது நடந்திருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் கடந்த சில மாதம் முன்பு கோட்டைப்பட்டினம் அருகே ஒரு பேக்கரி உணவு தயாரிப்பு கூடத்தில் கஞ்சா கைப்பற்றினார்கள் அந்த கூடத்தை உடைத்தார்களா என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. அதே நேரம் தற்போது கஞ்சா கைப்பற்றிய இறால் பண்ணை குட்டையில் வேறு எங்கும் போதைப் பொருள் புதைத்து வைத்திருப்பார்களோ என்ற சந்தேகத்தில் தான் உடைத்து தரைமட்டமாக்கி பார்த்திருக்கிறார்கள் என்கின்றனர்.

போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகை மற்றும் சட்ட விரோத இறால் பண்ணையை அதிகாரிகள் உடைத்து தரை மட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கலச ஊர்வலம்; அனுமதி தந்த அதிகாரிகள் - கொண்டாடிய பாமக

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Officials who gave permission to bury the ashes of Vanniyar Sangam

திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலம் சுற்றியுள்ள கிராமங்கள் வன்னியர் சமுதாயத்தினர் பலமாக உள்ள பகுதி. வன்னியர் சங்கத்தின் எழுச்சி பெரியதாக இருந்த காலகட்டத்தில் நாயுடுமங்கலம் கூட்டுசாலையில் பேருந்து நிறுத்தம் அருகில் 1989ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தின் சார்பில் வன்னியர் சங்கத்தின் அடையாளம் எனச் சொல்லப்படும் அக்னி கலசம் அமைக்கப்பட்டது. பட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படாத அந்தக் காலக்கட்டத்தில் வன்னியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த மருத்துவர் ராமதாஸ், அந்த அக்னி கலசம் சிலையை திறந்து வைத்தார்.

ஆண்டுகள் பல கடந்த நிலையில், பராமரிக்கப்படாமல் இருந்த அந்த அக்னி கலசம் சிலையை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவண்ணாமலை டூ வேலூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது நெடுஞ்சாலைத்துறை அகற்றியது. அப்போது, இதற்கு வன்னியர் சங்கம் மற்றும் பாமக கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேர் நாயுடுமங்கலத்தில் திரண்டு மறியல் போராட்டம் செய்தனர். சாலை விரிவாக்கம் முடிந்ததும் மீண்டும் அச்சிலை அங்கு வைக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

சாலை விரிவாக்க பணிகள் முடிந்த பின்பு அங்கு அக்னி கலச சிலை வைக்கப்படவில்லை. இதுகுறித்து வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் அதிகாரிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அக்னி கலசம் சிலை அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டது என்றும் அதனால் மீண்டும் வைக்கமுடியாது என அதிகாரிகள் சொன்னதாக கூறியுள்ளனர்.

Officials who gave permission to bury the ashes of Vanniyar Sangam

தமிழ்நாடு முழுவதுமே அனுமதி பெறாமல் பல சிலைகள் உள்ளது. அதனை ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். நாயுடுமங்கலம் என்கிற கிராமத்தில் வன்னியர் சமுதாய கலசம் வைப்பது சாதி பிரச்சனையை உருவாக்கும்  என அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர் . ஊர் பெயர்தான் நாயுடுமங்கலமே தவிர, அங்கு நாயுடு சமுதாயத்தினர் அவ்வளவாக இல்லை. அப்படியிருக்க இத்தனை ஆண்டுகளாக வராத சாதி பிரச்சனை இப்போது எப்படி வரும்? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்தவாரம் திடீரென திருவண்ணாமலை பாமக மா.செ பக்தவாச்சலம் தலைமையில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர், அக்னி கலச சிலையை கொண்டுவந்து விடியற்காலை நேரத்தில் அதே இடத்தில் வைத்தனர். இதனை அறிந்த போலீஸார் அச்சிலையை எடுத்துச்சென்று கலசப்பாக்கம் தாலுக்கா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இதுக்குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சாலை பணி முடிந்ததும் கலசத்தை வைக்கிறேன் என வாக்குறுதி தந்த அதிகாரிகள், இதுவரை வைக்கவில்லை. இதன்பின்னால் ஆளும்கட்சியின் திட்டமிட்ட அரசியல் உள்ளது. திமுக வன்னியர்களை திட்டமிட்டு புறக்கணிக்கிறது. கலசத்தை வைக்க அனுமதிக்கவில்லையென்றால் பெரும் போராட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டார். அதேபோல் இயக்குநர் கவுதமன் உட்பட வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், மார்ச் 14 ஆம் தேதி நாயுடுமங்கலத்தில் கூடுவோம். கலசத்தை மீண்டும் வைப்போம், திரண்டுவாருங்கள் வன்னிய சொந்தங்களே என பாமக, வன்னியர் சங்கம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தினர்.

Officials who gave permission to bury the ashes of Vanniyar Sangam

திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமல்லாமல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் திருவண்ணாமலையில் குவிய தொடங்கினர். இருசக்கர வாகனங்கள், கார்களில் வன்னிய சங்க நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் திருவண்ணாமலையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள நாயுடுமங்கலத்திற்கு வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.இளங்கோவன் தலைமையில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் செல்வகுமார், முன்னாள் எம்.எல்.ஏ மா.செ கணேஷ்குமார் புறப்பட்டனர். வாகனத்தில் புதியதாக அக்னி கலசம் கொண்டுவந்தனர். தடையை மீறி கலசம் வைப்போம் என அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் வருவாய்த்துறை, காவல்துறை திடீரென கலசம் வைக்க அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து கொண்டுவந்த அக்னி கலசத்தை பேருந்து நிழற்கூடம் அருகே பீடம் கட்டி அதில் வைத்து வன்னியர் சங்கத்தினரும், பாமகவினரும் வெற்றி கூச்சலிட்டனர். எந்த அசம்பாவிதத்திலும் தொண்டர்கள் ஈடுப்படக்கூடாது என எச்சரிக்கை விடுத்தபடியே இருந்தனர். சிலை அமைக்கப்பட்டதும் அனைவரும் கலைந்து சென்றனர்.

பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது என நான்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 1200 போலீஸார் வழி நெடுக பாதுகாப்புக்கு நின்றனர். போக்குவரத்தில் மிக முக்கிய சாலையான திருவண்ணாமலை - வேலூர் சாலையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. இதனால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.