சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், நிர்வாக பயிற்சி புத்தகத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியம் ஆகியோர் வெளியிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் குடிநீர் வழங்கல் துறை சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் சிங் தீப் பேடி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ் குமார், எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.