கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடமும், தமிழகம் இரண்டாம் இடமும், டெல்லி மூன்றாவது இடமும் வகிக்கின்றது.இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி கரோனாவைத்தடுக்க அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.