Skip to main content

சென்னையில் கரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு....!!

Published on 10/05/2020 | Edited on 10/05/2020
Coroner in Chennai

 

தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு நேற்று கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,535 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் கரோனாவால் மேலும் 4 பேர் உயிரிழந்ததால் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக இருந்தது. இந்நிலையில் சென்னையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதனால் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த 59 வயதான மாநகராட்சி தூய்மைப் பணியாளர் ஒருவர் கரோனா பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் இன்று காலை உயிரிழந்தார். 

அதேபோல்  கோயம்பேடு சந்தைக்கு வந்த ஆந்திர மாநில வியாபாரிகள் 13 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் சத்தியவேடு, நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் 13 பேருக்கு கரோனா உறுதியானது.

 

 

சார்ந்த செய்திகள்