coronavirus vaccine india union government hospitals

நாடு முழுவதும் இன்று (02/01/2021) கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகையை நடத்துகிறது மத்திய அரசு.

Advertisment

தமிழகத்தில் இன்று (02/01/2021) 17 இடங்களில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறவுள்ளது. எந்தெந்த இடங்களில் தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறுகிறது என்பதைப்பார்ப்போம்.

Advertisment

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஈக்காட்டுத்தாங்கல், சாந்தோம் சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடக்கிறது. அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி அரசு மருத்துவமனை, திருமழிசை, நேமம் சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தடுப்பூசிக்கான ஒத்திகை நடக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை அரசு மருத்துவமனைகள், நிலாக்கோட்டை சுகாதார நிலையம்; நெல்லை மாவட்டத்தில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி, சமாதானபுரம் சுகாதார நிலையங்கள்;கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, பி.எஸ்.ஜி. மருத்துவமனை, சூலூர் மருத்துவமனை, புலுவம் அரசு சுகாதார நிலையம், எஸ்.எல்.எம். ஹோம் சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும் தடுப்பூசிக்கான ஒத்திகை நடக்கிறது.

Advertisment

இன்று (02/01/2021) காலை 08.30 மணி முதல் காலை 10.30 மணி வரை இரண்டு மணி நேரம் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடக்கிறது.