Skip to main content

சேலம்: ஏப். 30ல் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம்! 1,392 மையங்களில் நடக்கிறது!! 

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

coronavirus vaccination camp in salem district collector announcement

 

சேலம் மாவட்டத்தில் ஏப். 30- ஆம் தேதி, 1,392 மையங்களில் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடக்கிறது.

 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 28- வது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (ஏப். 27) நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. 

 

அவர் கூறியதாவது, "கோவிட் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்திட வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் மாவட்டத்தில் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் ஏப். 30- ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. 

 

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், வாக்குச்சாவடி மையங்கள் உள்பட மொத்தம் 1,392 மையங்களில் இந்த முகாம் நடக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் 100 சதவீதம் கோவிட் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட மாவட்டமாக சேலம் மாவட்டம் திகழச் செய்ய வேண்டும். அதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். 

 

சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 91.3 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 70.9 சதவீதம் பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 7.4 சதவீதம் பேருக்கும் போடப்பட்டு உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் உள்பட 15 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டு இந்த மாபெரும் முகாம் நடத்தப்படுகிறது. 

 

மாவட்ட மற்றும் ஊராட்சிகள் அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடன் வீடு வீடாகச் சென்று கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கோவிட் தொற்றில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றுதான் பாதுகாப்பான வழிமுறை ஆகும். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள், இந்த மாபெரும் தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறினார். 

 

மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கவிதா, மேட்டூர் உதவி ஆட்சியர் வீர் பிரதாப் சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் செல்வம், நலப்பணிகள் துறை இணை இயக்குநர் நெடுமாறன், சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குநர்கள் நளினி, ஜெமினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கைகளை ‘சாதி’யாக வகைப்படுத்திய அரசு; சர்ச்சையைக் கிளப்பிய சாதிவாரி கணக்கெடுப்பு

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

Bihar government classified third genders as caste code  census

 

இந்தியாவில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில காரணங்களுக்காக நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், பீகாரில் முதல்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் பீகாரில் இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கப்பட்ட நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டிருந்தார். 

 

இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த கணக்கெடுப்பு முதற்கட்ட பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அதன் இரண்டாம் கட்ட பணிகள் இந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கி அடுத்த(மே) மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  அதன்படி ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குறிப்பிட்ட எண் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் உட்பிரிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதனால் சாதியில் எத்தனை உட்பிரிவு இருந்தாலும், அவர்கள் அனைவரும் அந்த சாதிக்கு ஒதுக்கப்பட்ட எண்ணில்தான் கணக்கிடப்படுகிறார்கள். 

 

இந்த நிலையில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளை சாதிவாரி கணக்கெடுப்பில் ஒரு சாதி என்று வகைப்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கணக்கெடுப்பில் அவர்களுக்கு 22 என்ற எண்ணானது ஒதுக்கப்பட்டு அதற்குள் அவர்களை உள்ளடக்கியுள்ளனர். இதற்கு பீகாரில் உள்ள சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

 

Next Story

பழைய பென்சன் திட்டம்: பரவும் போலிச் செய்தியும் அறியப்பட்ட உண்மையும்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

The Old Benson Project: Spreading Fake News and Known Truth

 

பழைய பென்சன் திட்டத்தில் சேர விரும்புபவர்களின் பட்டியலை நிதித்துறை சேகரிப்பதாகவும் அதற்கான சர்க்குலர் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் பரபரப்பாக பரவி வருகிறது. ஆனால் நிதித்துறையின் அந்த சர்க்குலர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. 

 

பழைய ஓய்வூதிய திட்டத்தில் தற்காலிகப் பணியாளராக அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் ஒரு கட்டத்தில் அவர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டனர். அப்படி நிரந்தரப்படுத்தப்படும்போது புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. அந்த வகையில் நிரந்தரப்படுத்தப்பட்ட ஊழியர்கள் பலர் ஓய்வு பெறுகிறார்கள். அப்போது அவர்கள், "பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருக்கும்போதே நாங்கள் பணியில் சேர்ந்துவிட்டோம். அதனால் எங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் படிதான் பென்சன் வழங்க வேண்டும்" என நீதிமன்றத்தை அணுகினர். 

 

நீதிமன்றமும் இவர்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பலருக்கும் பழைய பென்சன் திட்டத்தில் பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதிரி பலரின் வழக்குகள் நிலுவையிலும் இருந்து வருகிறது. இதன் டேட்டாக்களைத் தான் துறை வாரியாக அனுப்பி வைக்கும்படி நிதித்துறை சர்க்குலர் அனுப்பியுள்ளது. மற்றபடி பழைய பென்சன் திட்டத்தில் சேர்பவர்களின் விருப்பப் பட்டியலை நிதித்துறை திரட்டவில்லை.