/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Coronavirus (3)_2.jpg)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,652 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று தமிழக மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 2,652 பேருக்கு கரோனா உறுதியானதால் மொத்தம் பாதிப்பு 25,21,438 ஆனது. இன்று 1,40,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கரோனா பாதிப்பு 2,652 ஆக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் 24 பேர், தனியார் மருத்துவமனைகளில் 12 பேர் என மொத்தம் 36 பேர் இன்று இறந்த நிலையில், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 33,454 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் கோவை, கடலூர், ஈரோடு உள்பட 20 மாவட்டங்களில் கரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 31,819 ஆக உள்ளது. கரோனாவில் இருந்து மேலும் 3,104 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,56,165 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தொடர்ந்து 52- வது நாளாக ஒருநாள் கரோனாபாதிப்பு குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)