Skip to main content

கரோனா வைரஸ் தொற்று பட்டியல்-திருச்சியில் பல்வேறு இடங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்க வாய்ப்பு !

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திய நிலையில் இந்தியாவில் 21 நாள் 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 10 நாட்கள் முடிந்த நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு மாநிலத்தில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் கரோனா பதிப்பு எதுவும் அதிகப்படியாக இல்லாமல் இருந்தது.இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு டெல்லி கூட்டத்திற்குச் சென்று வந்தவர்கள் பட்டியல் எடுத்து அவர்களை அழைத்து வந்து சோதனைக்கு உட்படுத்தினார்கள்.அவர்களைச் சோதனைக்கு உட்படுத்தி 4 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் ரிசல்ட் மட்டும் வெளியிடப்படாமல் வைத்திருந்தனர்.

கரோனா பாதிப்பு பட்டியலில் திருச்சி வரவில்லை என்பதால் பொதுமக்கள் சாலையில் பயணிக்க ஆரம்பித்தனர்.இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் கரோனா சோதனையின்போது காலாவதியான மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு வந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.இதை நக்கீரன் இணையத்தில் வெளியிட்டோம்.

coronavirus trichy many area places

அப்போது இந்தக் குற்றச்சாட்டை சொன்ன அமைப்பைச் சேர்ந்த முக்கியமானவர்களை அழைத்து பேசிய திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர், அந்த உபகரணம் எந்தச் சோதனையையும் பாதிக்காது,இது பிரிண்டிங் மிஸ்டேக் என்று சொல்லி அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினார்.

இதற்கு இடையில் சோதனைக்கு எடுக்கப்பட்ட மாதிரியை டெஸ்ட் பண்ணுவதற்கு திருவாரூர் அனுப்பி வைத்தனர்.அந்தச் சோதனை முடிவுகளை மீண்டும் மறு ஆய்வு செய்வதற்கு விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.அந்த ஆய்வின் முடிவுகள் வெளிவந்துவிட்டது. ஆனால் அதை இன்னும் முறைப்படி அறிக்கவில்லை.ஒரு வேலை இன்று 04.04.2020 மாலை அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது.

அந்தப் பட்டியலில் முதல்கட்டமாக 29 பேர் கரோனா ஆய்வுக்குச் சோதனை செய்ததில் 18 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திருச்சி அதிகாரிகள் இதனால் உஷார் ஆகியுள்ளனர்.

இந்தப் பட்டியலை பார்த்த அதிகாரிகள் நோய்த் தொற்று பரவலைக் கட்டுபடுத்துவதற்கு என்று கிட்டதட்ட 12 இலட்ச ரூபாய்க்கு மாவட்ட நலப்பணிக்குழு உதவியுடன் புதிய கருவி ஒன்று வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.இதனை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர்.

கரோனா பாதிப்பு ஏற்பட்ட நபர்கள் திருச்சி நம்பர் 1 டோல்கேட்,உறையூர், லால்குடி, முசிறி, தில்லைநகர், பீமநகர், பொன்னகர், அண்ணநகர், மணப்பாறை, ஆழ்வார்தோப்பு, மண்ணச்சநல்லூர், தென்னூர், பாலக்கரை, திருவெறும்பூர், துவாக்குடி ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 29 பேரில் 18 பேருக்குப் பாசிட்டிவ் என வந்திருக்கிறது. இன்னும் 60 பேர் ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

ஏற்கனவே லால்குடி, தாளக்குடி பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்து திருச்சி மாநகரில் பல்வேறு இடங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது என அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க மக்கள் வெளியே வராமல் வீட்டிற்குள் இருக்குமாறு மத்திய, மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி இருப்போம் என மக்களிடம் அதிகாரிகள் வேண்டுகோள் வைப்பதுடன்,மக்கள் வீட்டிற்குள் இருந்தால்தான் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவது சாத்தியம் என்கின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.