தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு காலை 05.00 மணியுடன் முடிந்ததால் டீக்கடை உள்ளிட்ட சிறிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குறைந்த அளவிலே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 50% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளதால் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
அதேபோல் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்குப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகிறது.