Skip to main content

கரோனா : சேலம் ரேஷன் கடைகளில் நிவாரண உதவித்தொகை பட்டுவாடா !

Published on 03/04/2020 | Edited on 03/04/2020


கரோனா வைரஸ் தொற்று அபாயத்தால் வாழ்வாதாரம் முடங்கிய நிலையில் இருக்கும் தமிழக மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஏப். 2) ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் மற்றும் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருள்களும் விலையில்லாமல் வழங்கும் பணிகள் தொடங்கின.
 

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, 9 லட்சத்து 75 ஆயிரத்து 741 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள் மட்டுமின்றி 882 இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கும் ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகையுடன், உணவுப்பொருள்களும் வழங்கப்பட்டன. 
 

 

coronavirus tamilnadu government fund in peoples


கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, ஒவ்வொரு நாளும் சராசரியாக 100 கார்டுதாரர்கள் வீதம் நிவாரணத் தொகை, உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.எந்தெந்த நாளில் யார் யாரெல்லாம் ரேஷன் கடைக்கு வர வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே பயனாளிகளிடம் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.

கரோனா வைரஸ் தொற்று அபாயத்தைத் தவிர்க்க, ஒவ்வொரு ரேஷன் கடைகள் முன்பும் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் வகையில், ஒவ்வொரு நபருக்கும் இடையில் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு கட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. அடையாளக் குறியிட்ட இடத்தில் நின்று மக்கள் நிவாரணத்தொகை மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருள்களை வாங்கிச் சென்றனர். 

சேலம் அம்மாபேட்டை பாலாஜி நகரில் உள்ள ரேஷன் கடை (எண்: 07ஏடி012பிஎன்) ஊழியர் வாசு என்பவர் கூறுகையில், ''எங்கள் ரேஷன் கடைக்கு உட்பட்ட கார்டுதாரர்களுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பே நேரில் சென்று, டோக்கன் விநியோகம் செய்து இருந்தோம். முதல்கட்டமாக, 400 பேருக்கு டோக்கன் கொடுத்து இருந்தோம். 

அதன்படி, இன்று (ஏப். 2) 100 பேருக்கு நிவாரணத் தொகையுடன்,அந்தந்த கார்டுதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவுக்கு உணவுப்பொருள்களும் வழங்கப்பட்டன.சமூக இடைவெளி வேண்டும் என்பதற்காக, ஒவ்வொருவருக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க கட்டங்கள் வரைந்து இருந்தோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புக்கட்டைகள் அமைத்து வரிசையை ஒழுங்கு படுத்தினோம். 

மக்களும் ஒத்துழைப்பு கொடுத்து, பொருள்களை வாங்கிச் சென்றனர். மதியத்திற்குப் பிறகு மீண்டும் டோக்கன் விநியோகப் பணிக்குச் சென்று விட்டோம்.கடைக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் சப்ளை செய்யப்பட்டு உள்ளது. 

அதேபோல், ரேஷன் ஊழியர்களின் நலன் கருதி, அவர்களின் சுகாதாரத்திற்காக கைகளைக் கழுவ சேனிடைசர், சோப்பு, பக்கெட், ஜக், முகக்கவசம் ஆகியவையும் வழங்கப்பட்டு இருந்தன,'' என்றார்.
 

இப்பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், கூட்டுறவு சங்கங்களின் சேலம் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். 

மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், ''சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசி பெறும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் ரேஷன் கடைகளுக்கு வரும் முன்னர், கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் கைகளை நன்றாகச் சோப்பு போட்டு கழுவிவிட்டு வர வேண்டும்.கடையில் வரிசையில் நிற்கும்போது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். 

நிவாரணத்தொகை மற்றும் உணவுப்பொருள்களை பெறுவதற்கான டோக்கன்கள் அவர்களைத் தேடி நேரடியாக வீட்டுக்கே வரும்.டோக்கன் பெறுவதற்காக யாரும் ரேஷன் கடைகளுக்கு வர வேண்டியதில்லை.டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்றால் போதுமானது.சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 97.66 கோடி ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட உள்ளது,'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.