Skip to main content

மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலுடன் சிவகங்கையை அசத்தும் சித்த மருத்துவம்!

Published on 18/04/2020 | Edited on 27/04/2020


கரோனா நோய்த் தொற்றை அழிக்க, உலகமே மருந்துக் கண்டுபிடிக்க முயற்சித்து வரும் வேளையில், கரோனாவினைக் கட்டுப்படுத்தும் மருந்து சித்த மருத்துவத்தில் உள்ளது எனப் பழங்கால ஓலைச்சுவடிகளின் துணை கொண்டு மருந்து தயாரித்து, கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தி வருகின்றது சிவகங்கை மாவட்ட நிர்வாகம்.

 

 

 

 

 

coronavirus siddha treatment sivagangai medical college

 

கடந்தாண்டு சீனாவின் வூகானில் உருவான கரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி எண்ணற்ற உயிர்களைப் பலி கொண்டு வரும் வேளையில், இன்னது தான் கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து என யாரும் அறுதியிட்டு கூறாத நிலையில், ’பழைய ஓலைச்சுவடிகளில் இதற்கான மருத்துவம் இருக்கின்றது’ என ஓலைச்சுவடிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனை அனுகியிருக்கின்றார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆவுடைப்பொய்கை பகுதியில் வசிக்கும் சித்த மருத்துவர் சொக்கலிங்கம்.

 

coronavirus siddha treatment sivagangai medical college

 

ஓலைச்சுவடிகளில் குறிப்பிட்ட, ஆடாதோடா, பேய்புடல், தூதுவளை, கோஸ்டம், தும்பை வேர் சமூலம், சீந்தில்கொடி, வில்வ வேர், சித்தரத்தை, கிராம்பு, நிலவேம்பு, கண்டங்கத்திரி, சுக்கு, திப்பிலி, மல்லி, கோரைக்கிழங்கு, தாளிச்சபத்ரி, ஏலம், வால்மிளகு உள்ளிட்ட 18 மூலிகைகளையும் ஒன்று சேர்த்து, ஏழு பகுதிகளாகப் பிரித்து, வகைக்கு 35 கிராம் வீதம் 630 கிராம் அளவை 90 கிராம் அளவாக்கி 1 லிட்டர் தண்ணீரில் நன்கு சுண்ட காய்ச்சி, 100 மில்லியாக்கி நாளைக்கு இரண்டு தடவை அருந்தினால் கரோனாவினைக் கட்டுப்படுத்தி குணப்படுத்தலாம் என்கின்ற அகஸ்தியர் வைத்திய முறையை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் விளக்க, ஆர்வப்பட்ட ஆட்சியரும் ஓலைச்சுவடிகளைப் படித்து, நிர்வாக ரீதியாக சில வழிக்காட்டல்களை வழங்கியுள்ளார்.

 

coronavirus siddha treatment sivagangai medical college

 

 

http://onelink.to/nknapp

 

ஆட்சியரின் வழிக்காட்டுதலுடன் தயாரிக்கப்பட்ட வாத பித்த கப விஷ சுர கஷாயம் முதலில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த கரோனா பாசிட்டிவ் நோயாளிகளுக்கும், பாசிட்டிவ் நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கும் காலை மாலை இரு வேளைகளிலும், திருப்புவனம் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள், கேஸ் சிலிண்டர் விநியோகிப்பவர் மற்றும் செவிலியர்கள் ஆகியோர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதாகவும் இதன் காரணமாக மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்பாட்டிலிருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். மொத்தமுள்ள கரோனா பாசிட்டிவ் நோயாளிகள் 11 நபர்களில் 4 நபர்கள் நலமாக வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரற்ற சடலங்களுக்கு இவ்வளவு மதிப்பா? மாற்றி யோசித்த கேரள அரசு!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kerala earned revenue by selling corpses

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மாறி மாறித் தாக்கிக் கொண்ட அரசு மருத்துவரும் பெண் நோயாளியும்; வேலூரில் பரபரப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Government doctor and female patient who took turns beating in Vellore

வேலூர் அடுத்த சாத்துமதுரை பகுதியைச் சேர்ந்தவர் சுபா(36) இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏழு நாட்களாக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் இவரைக் காண ஆண் உறவினர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு ரவுண்ட்ஸ் வந்த முதுகலை மருத்துவம் பயிலும் மருத்துவர் விஷால் என்பவர் சுபாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையில் அமர்ந்திருந்த ஆண் நபரிடம், இது பெண்களுக்கான வார்டு ஆண்கள் உள்ளே வரக்கூடாது என வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

நான் யார் தெரியுமா, வெளியில எல்லாம் போக முடியாது... நீ போ என ஒருமையில் மருத்துவரிடம் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் முற்றியுள்ளது. திடீரென ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது நோயாளி சுபாவும் மருத்துவரை தாக்கியுள்ளார். அதோடு தான் அணிந்திருந்த காலணியால் மருத்துவரை தாக்கியுள்ளார். இது நோயாளிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கிருந்து பெண் செவிலியர்கள் தடுக்க முடியாமல், ‘ஐயோ காப்பாத்துங்க காப்பாத்துங்க...’ என கத்தினர். அதன்பின் அருகில் இருந்த நோயாளியை பார்க்க வந்தவர்கள் இரு தரப்பையும் விலக்கி விட்டுள்ளனர்.

மருத்துவர்கள் தரப்பிலிருந்து காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு கூறியதும், மருத்துவமனைக்கு வந்த வேலூர் தாலுகா காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட முதுகலை மருத்துவ மாணவர் விஷால் அளித்த புகாரின் அடிப்படையில் பணியில் உள்ள மருத்துவரை தாக்குவதை தடுக்கும் சட்டத்தின் கீழ், பணி செய்ய விடாமல் தடுக்கும் சட்டம், தாக்குதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் மருத்துவரை தாக்கிய பெண் நோயாளி சுபா மற்றும் அவரது உறவினர் திவாகர் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நோயாளி சுபா கூறுகையில், நான் கடந்த ஏழு நாட்களாக இங்கு சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு மன அழுத்தமும் உள்ளது. இந்நிலையில் என்னை காண வந்த உறவினரை வார்டுக்கு வந்த மருத்துவர் ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார். இதை நான் கேட்டதற்கு என்னையும், என் தாயாரையும் தகாத வார்த்தைகளால் அவதூறாக திட்டினார். பின்னர் மருத்துவர் தான் எங்களை முதலில் அறைந்தார். அதன் காரணமாகவே மருத்துவரை தாக்கியதாக தெரிவித்தார். 

இதுகுறித்து வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாப்பாத்தியிடம் கேட்டபோது, “பெண்கள் வார்டில் ஆண்கள் நுழையக்கூடாது. ஆனால் அந்த நபர் படுக்கையில் படுத்துள்ளார். இதை கேட்டதற்கு மருத்துவரை தாக்கியுள்ளார்கள். செவிலியர்கள் விலக்கிய போதும் செருப்பால் பெண் நோயாளி மருத்துவரை தாக்கியுள்ளார். புகார் அளித்துள்ளோம், காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அவர்கள் கூறியதில் உண்மைத்தன்மை இல்லை” எனக் கூறினார்.

அரசு மருத்துவமனையில் நோயாளி, மருத்துவர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.