coronavirus relief fund peoples chief minister mkstalin

கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான ரூபாய் 2,000 ரேஷனில் வழங்கும் திட்டத்தையும், கரோனா நிவாரண உதவியாக 14 மளிகைப் பொருட்களை வழங்கும் திட்டத்தையும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (03/06/2021) தொடங்கிவைக்கிறார்.

Advertisment

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

Advertisment

14 மளிகைப் பொருட்கள் என்னென்ன? என்பது குறித்துப் பார்ப்போம்!

1. கோதுமை மாவு - 1 கிலோ,

2. உப்பு - 1 கிலோ,

3. ரவை - 1 கிலோ,

4. உளுத்தம் பருப்பு - 1/2 கிலோ,

5. சர்க்கரை - 1/2 கிலோ,

6. புளி - 1/4 கிலோ,

7. கடலை பருப்பு - 1/4 கிலோ,

8. கடுகு - 100 கிராம்,

9. சீரகம் - 100 கிராம்,

10. மிளகாய் தூள் - 100 கிராம்,

11. மஞ்சள் தூள் - 100 கிராம்,

12. டீ தூள் இரண்டு பாக்கெட் - 100 கிராம்,

13. குளியல் சோப்பு - 1 (125 கிராம்),

14. துணி சோப்பு - 1 (250 கிராம்).

தமிழகத்தில் உள்ள 2.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.