சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூபாய் 109 உயர்ந்து ரூபாய் 4,231 என்ற புதிய உச்சத்தை எட்டியது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 872 உயர்ந்து ரூபாய் 33,848 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 1 உயர்ந்து ரூபாய் 50.70 க்கு விற்பனை ஆகிறது.
கரோனா அச்சம் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.