Skip to main content

கரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களுக்கு அரசு அறிவுறுத்தல்!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020


வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டாரென ஸ்டான்லி அரசு மருத்துவமனை அறிக்கைக் கொடுத்து,இறுதிச்சடங்கு முடித்த வேளையில்"இல்லையில்லை.!! கரோனா வைரஸ் தொற்றாலே அவர் இறந்தாரென "பொதுச் சுகாதாரத்துறை அறிக்கைவிட உயிர் பயத்தில் உள்ளனர் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட அந்த 300 நபர்கள்.
 

coronavirus ramanathapuram case ministry of health instruction

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை டவுன் தெற்குத்தெரு 108ம் எண்ணில் வசித்து வந்தவர் ஜமால். 71 வயதான இவர் சென்னை மண்ணடி பவளக்காரத் தெருவில் தங்கி வியாபாரம் செய்து வந்துள்ளார்.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வியாபார ரீதியாக வெளிநாட்டிற்குச் சென்று சென்னை திரும்பியவருக்கு மூச்சுத்தினறல் ஏற்பட,தொடக்கத்தில் தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்துள்ளார்கள் அவரது உறவினர்கள்.சிகிச்சை பலனளிக்காததால் அங்கிருந்து தொடர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் பெரியவர் ஜமால்.

 

coronavirus ramanathapuram case ministry of health instruction


அங்கும் சிகிச்சை பலனளிக்காமல் போக கடந்த 02/04/2020 அன்று இறந்துள்ளார் அவர்.வயது மூப்பின் காரணமாகவே ஜமால் இறந்துள்ளார் எனச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சான்றிதழ் தர இறுதிச்சடங்கிற்காக ஜமாலின் உடலைச் சொந்த ஊரான கீழக்கரைக்கு கொண்டு வந்துள்ளனர் உறவினர்கள். பெரிய மனிதர் என்பதால் ஊரே திரண்டு அஞ்சலி செலுத்த ஜமாலின் உடல் கீழக்கரை நடுத்தெரு ஜீம்மா பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.
 

coronavirus ramanathapuram case ministry of health instruction


இந்நிலையில், கடந்த 4ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், "சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 02/04/2020 அன்று இறந்த கீழக்கரையைச் சேர்ந்த ஜமாலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிச்செய்யப்பட்டுள்ளது.கரோனா தொற்றாலே அவர் இறந்துள்ளார்." எனப் பேட்டியளித்தார்.அன்றிரவே இறந்த ஜமால் குடும்பத்தினர் தங்கியிருந்த பகுதியினை சீல் வைத்தது மாவட்ட நிர்வாகம். மறுநாள் அப்பகுதிகளுக்குக் கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்களைத் தெளித்து சுகாதாரப் பாதுகாப்பினை இருமடங்காக்கியது.அத்துடன் இல்லாமல், " ஜமாலின் உறவினர்கள் 11 நபர்கள் கண்டறியப்பட்டு,அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
 

coronavirus ramanathapuram case ministry of health instruction

 

அது போக அவரது இறுதிச்சடங்கில் 50 நபர்கள் கலந்து கொண்டதாகத் தெரிகின்றது.அவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் கோருகின்றது."என்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ் அறிக்கை வெளியிட்டார். "முன்பே கரோனாவால் இறந்தார் என்றால் நாங்கள் எப்படி இறுதிச்சடங்கில் கலந்து கொள்வேம்..? அது போக இறுதிச்சடங்கில் கலந்து கொண்டது 50 அல்ல..!!! 300 நபர்கள்..!அரசின் அலட்சியத்தால் முன்னுக்குப் பின் முரணான தகவலால் எங்களுக்குத் தான் மரணவேதனை" என்கின்றனர் கீழக்கரை வாசிகள். இதனால் இப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆயுதக் கிடங்காக இருந்த அரண்மனையைப் பாதுகாக்க தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கோரிக்கை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Antiquities Protection Forum request to protect the palace which was a weapons warehouse

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில், சேதுபதி மன்னர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அரண்மனையை பாதுகாக்கவேண்டும் என திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 2010 முதல் செயல்பட்டு வரும் இம்மன்றத்தின் தலைவராக, தலைமை ஆசிரியர் ரெ.புரூணா ரெத்னகுமாரி உள்ளார். இம்மன்ற மாணவர்கள் 55 பேர் மன்றச் செயலர் வே.ராஜகுரு, பட்டதாரி ஆசிரியர் கௌரி ஆகியோர் தலைமையில் அரண்மனையை பார்வையிட்டனர். 

அப்போது அரண்மனை பற்றி வே.ராஜகுரு கூறியதாவது, “டச்சுக்காரர்கள், கி.பி.1759-ல், கீழக்கரையில் ஒரு நெசவுத் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள செல்லமுத்து சேதுபதியிடம் அனுமதி பெற்று, நாளடைவில் அதை ஒரு கோட்டையாக மாற்ற முயற்சி செய்த போது போர்ப்பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்ட முடிவு செய்த நேரத்தில், செல்லமுத்து சேதுபதி இறந்துவிட்டார். இரண்டு வயதில் முத்துராமலிங்க சேதுபதி மன்னரான போது, அவருடைய தளவாய் தாமோதரம் பிள்ளை இந்த அரண்மனையைக் கட்டியுள்ளார். கி.பி.1767-ல் கொண்ட உடன்பாட்டுக்குப்பின் சேதுபதிகள் டச்சுக்காரர்களுடன் இணக்கமாயினர்

ஆங்கிலேயர்கள் கி.பி.1772-ல் சேதுநாட்டை கைப்பற்றியபிறகு, அவர்களின் ஆதிக்கத்தை அகற்ற, வெளியுலகுக்குத் தெரியாத மறைவான காட்டுப் பகுதியில் இருந்த இந்த அரண்மனையை ஆயுதத் தொழிற்சாலையாகவும், ஆயுதக் கிடங்காகவும் முத்துராமலிங்க சேதுபதி பயன்படுத்தியுள்ளார்.

தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இதற்கு இரு வாசல்கள் உள்ளன. இதன் உள்ளே சதுர வடிவக் கட்டடங்கள் நான்கு உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் மூலையிலும் கதவு உள்ள நான்கு அறைகளும், நீண்ட நான்கு தாழ்வாரங்களும் என மொத்தம் 16 அறைகளும் 16 தாழ்வாரங்களும் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் நடுவிலும் ஒரு குளம் உள்ளது. இதிலிருந்து கதவு ஜன்னல்களை பிரித்தெடுத்துவிட்டதனால் ஆங்காங்கு மேற்கூரை மற்றும் சில பகுதி சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளன. கட்டடங்களில்  மரங்கள் வளர்ந்துள்ளன.

இதன் மேலே செல்வதற்கு படிக்கட்டுகள் இருப்பதும், மேலே வீரர்கள் நின்று காவல் காக்கும் இடம் இருப்பதும், உள்ளே குளங்கள் உள்ளதும் இது ஆயுதத்  தொழிற்சாலையாக இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இதேபோன்ற ஒரு ஆயுத தொழிற்சாலை அரண்மனை ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து அழிந்துள்ளது. அதன் அடிப்பகுதியையும், ஒரு பகுதி சுற்றுச்சுவரையும் இப்போதும் அங்கு காணலாம். இவ்வாறு அவர் கூறினார். தங்கள் ஊர் வரலாற்று பெருமை சொல்லும் இந்த அரண்மனையை நினைவுச் சின்னமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர் கேட்டுக் கொண்டனர்.

Next Story

ரூ. 112 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; ராமநாதபுரத்தில் பரபரப்பு

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Rs. 112 Crore cannabis seized  to Sri Lanka

தமிழக கிழக்கு கடற்கரை கிராமப் பகுதிகளைக் குறிவைத்து அந்தப் பகுதிகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் நடப்பதும் அதேபோல இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும் வழக்கமாகிவிட்டது.

இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், திருச்சி மற்றும் ராமநாதபுர சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் (CIU) சோதனையில் ஈடுபட்டபோது மீமிசல் வெளிவயல் உப்பளம் அருகே நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான் என்பவரது இறால் பண்ணையில் இருந்து ரூ. 110 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஆயில் (அசிஸ்), மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள 874 கிலோ கஞ்சா மூட்டைகள் உட்பட மொத்தமாக ரூ.112 கோடி மதிப்பிலான போதைப் பொருள் வைத்திருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த கடத்தல் தொடர்பாக எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த இருவரையும் மீமிசல் அரசனகரிபட்டினம் பகுதியைச் சேர்ந்த இறால் பண்ணை காவலாளி முஜிபுர் ரஹ்மான் உட்பட மூன்று பேரையும் பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் விசாரணையில், இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது? யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது? இலங்கைக்கு எந்த வழியாக யார் கொண்டு செல்ல இருந்தது என்பதும் மேலும் வேறு கஞ்சா பதுக்கல் குடோன்கள் எங்கெல்லாம் உள்ளது என்றும் விசாரணையில் தெரிய வரும் என்கின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள போதைப் பொருட்களின் உரிமையாளரைத் தேடி வருவதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 112 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மத்திய சுங்கத்துறை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.