Skip to main content

தேனி மாவட்டத்தில் ஜூலை 15 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

coronavirus prevention theni district lockdown and relaxation

 

தேனி மாவட்டத்தில் ஜூலை 1- ஆம் தேதி முதல் 15- ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

தேனி மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து வணிகர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, ஜூலை 1- ஆம் தேதி முதல் வருகிற 15- ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. நகராட்சிகள் மட்டுமின்றி பேரூராட்சிகளிலும் அத்தியவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மதியம் 02.00 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் இந்த கட்டுப்பாடுகளை அனைத்து வணிகர்களும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

தற்போது நகராட்சி பகுதிகளில் உள்ள நேரக்கட்டுப்பாடுகள் மற்றும் குறிப்பிட்ட கடைகள் மட்டும் திறந்து இருக்கும் என்ற விதிமுறைகள் தொடரும் பேரூராட்சி பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, டீ கடைகள், பேக்கரிகள், நகைக்கடைகள், பெட்டிக்கடைகள், பர்னிச்சர் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், டிவி விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள் சாலை யோரங்களில் உணவு பொருட்கள் கடைகள் பேன்சி ஸ்டோர் செல்போன் விற்கும் மற்றும் பழுது நிற்கும் கடைகள் செயல்படாது.

ஆனால் காய்கறி கடைகள், மளிகை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள், காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் நடமாடும் வாகனங்கள், கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள், வங்கிகள், ஆகியவை முன்பு இருந்தது போலவே மதியம் 02.00 மணி வரை இயங்கும். 

ஆட்டோ டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்கள் மருத்துவ அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 33 சதவீத பணியாளர்களைக் கொண்டு இயங்கலாம். பொது  விநியோகக் கடைகள் இயங்கலாம். உணவகங்கள் காலை 07.00 மணி முதல் 09.00 மணி வரையிலும், மதியம் 12.00 மணி முதல் 02.00 மணி வரையிலும், இரவு 07.00 மணி முதல் 09.00 மணி வரையிலும் பார்சல் பார்சல் மற்றும் டோர் டெலிவரி மட்டும் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதியோர் இல்லங்கள் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள், சமுதாய சமையல் கூடங்கள், அச்சகங்கள், ஊடகங்கள், நீதிமன்றங்கள், பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இ- பாஸ் பெறும் நடைமுறை செயல்பாட்டில் இருக்கும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.