Skip to main content

கரோனா தடுப்பு பணியில் வீராங்கனைகளாக வலம் வரும் செயல் அலுவலர்கள்!

Published on 02/04/2020 | Edited on 02/04/2020


திண்டுக்கல் மாவட்டத்தில் அமைய நாயக்கனூர், ஆயக்குடி, அய்யலூர், அகரம், அய்யம்பாளையம், பாலசமுத்திரம்,வத்தலக்குண்டு, சின்னாளபட்டி, எரியோடு, கன்னிவாடி கீரனூர், நத்தம், நிலக்கோட்டை, ஆலமரத்துப்பட்டி, அணைக்காடு, பட்டி வீரன்பட்டி, சேவகம் பட்டி, சித்தையன்கோட்டை. ஸ்ரீராமபுரம், தாடிக்கொம்பு, வடமதுரை, வேடசந்தூர் என 23 பேருராட்சிகள் உள்ளன.
 

CORONAVIRUS PREVENTION GOVERNMENT OFFICERS


இதில் அகரம் பேரூராட்சியில்- அன்னலட்சுமி, அம்மையநாயக்கனூர்- பூங்கொடி, பட்டிவீரன்பட்டி- உமாசுந்தரி, சின்னாளபட்டி- கலையரசி, கன்னிவாடி- பாண்டீஸ்வரி, கீரனூரில்- ஈஸ்வரி, நெய்ககாரப்பட்டி- தாமரை, பாளையம்- ராஜலட்சுமி, ஸ்ரீராமபுரம்- சந்தானம்மாள் உள்பட 11-பேரூராட்சிகளில் பெண்கள் செயல் அலுவலர்களாக இருந்து வருகிறார்கள்.
 

CORONAVIRUS PREVENTION GOVERNMENT OFFICERS


இவர்களில் சிலர் சம்மந்தப்பட்ட பகுதிகளிலேயே வசிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலனோர் தினசரி 50 கிலோமீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து தாங்கள் பணி புரியும் பேரூராட்சிகளில் உள்ள பொது மக்களுக்கு கரோனா பரவாமல் தடுக்க இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.
 

CORONAVIRUS PREVENTION GOVERNMENT OFFICERS


ஒவ்வொரு நாளும் அரசின் உத்தரவுப் படி, இவர்கள் கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனம் மூலம் அதிகாலையில் தாங்கள் பணிபுரியும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து துப்புரவு பணியாளர்களுக்கான பகுதிகளை ஒதுக்கி சுத்தம் செய்ய சொல்வதும், கரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஒவ்வொரு பகுதிக்கும் போய் கிருமிநாசினி தெளிக்க பணியாளர்களை அறிவுறுத்துகிறார்கள்.
 

CORONAVIRUS PREVENTION GOVERNMENT OFFICERS


நகரம் முதல் கிராமங்கள் வரை சுகாதாரப் பணிகள் மூலம் பொதுமக்களை பாதுகாத்து வரும் இந்தப் பெண் செயல் அலுவலர்கள் அனைவருமே வீராங்கனைகளாக வலம் வருகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை-நிலக்கோட்டையில் அதிகாரிகளின் மெத்தனம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Is there an election? Or not?- Complacency of authorities in Nilakottai

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல்  சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.