கரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் குணமடைந்துள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ரத்த மாதிரியை மீண்டும் பரிசோதித்ததில் கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அரசு சார்பில் சிறந்த முறையில் சிகிச்சை தரப்பட்டதால் கரோனா பாதித்தவர் குணமடைந்தார். தமிழகத்தில் யாருக்கும் கரோனா பாதிப்பில்லை." இவ்வாறு ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.