tngovt

Advertisment

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாளுடன் (30/11/2020) முடிவடையும் நிலையில், புதிய தளர்வுகளை அளிப்பது குறித்தும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்து வருகிறார்.

tngovt

இதற்கு முன்னதாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் காணொளி மூலம் ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ குழு அளிக்கும் கருத்துகள் அடிப்படையில் புதிய தளர்வுகள் குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.