Advertisment

ரேஷனில் ரூபாய் 2,000 ரூபாய் நிவாரண நிதி விநியோகம் தொடங்கியது!

CORONAVIRUS LOCKDOWN RELIEF FUND PROVIDED PEOPLES TAMILNADU

தமிழகத்தில் கரோனாநிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2,000 வழங்கும் பணிதொடங்கியது.

Advertisment

கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையத்தில்ரூபாய் 2,000 நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தமிழக உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் ரூபாய் 2,000 நிவாரண நிதி விநியோகத்தைத் தொடங்கிவைத்தனர்.

Advertisment

ஏற்கனவே, டோக்கன் வாங்கியவர்களுக்கு ரேஷன் கடைகளில் ரூபாய் 2,000 நிதி வழங்கப்பட்டுவருகிறது. பொதுமக்கள் தனிமனித இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து நிவாரண நிதியைப் பெற்றுவருகின்றனர்.

கரோனா நிவாரண நிதியின் முதல் தவணை தற்போது வழங்கப்பட்டுவரும் நிலையில், இரண்டாவது தவணையை அடுத்த மாதம் அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

coronavirus lockdown tngovt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe