தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் புதிய தளர்வுகளை அறிவிப்பது பற்றி முதல்வர் பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழுவுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சுமார் நான்கு மணிநேரம் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசித்த நிலையில் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மருத்துவர்களுடனான ஆலோசனைக்கு பிறகு, தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பா, இ- பாஸ் ரத்து செய்யப்படுமா,புதிய தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து இன்று மாலையே தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.