Advertisment

மேலும் கூடுதல் தளர்வுகள்?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை!

coronavirus lockdown additional relaxation chief minister mkstalin discussion

தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூலை 19- ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை (16/07/2021) காலை 11.00 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisment

இந்த ஆலோசனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டி.ஜி.பி. முனைவர் சைலேந்திர பாபு, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Advertisment

ஆலோசனையின் போது, கரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்துவது, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஹார்டுவேர்ஸ் கடைகள் உள்ளிட்ட கடைகளின் நேரத்தை நீடிப்பது உள்ளிட்ட கூடுதல் தளர்வுகளை அளிப்பது ஆகியவைக் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் கூறுகின்றன.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, தமிழக அரசு நாளை (16/07/2021) அல்லது நாளை மறுநாள் (17/07/2021) கூடுதல் தளர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

chief minister coronavirus lockdown Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe