Skip to main content

பன்னீருக்குப் பதிலாக சானிடைசர், சந்தனத்துக்குப் பதிலாக முகக்கவசம்... இன்னும் என்ன? திண்டுக்கல் திருமணம்!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நேற்று (22/03/2020) ஒரு நாள் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் கடைகளும் அடைக்கப்பட்டு பொதுமக்களும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதன் பிறகு நேற்று மாலை 05.00 மணிக்கு பொதுமக்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் தங்களது குடும்பத்தினருடன் வீட்டு வாசலில் நின்று கைதட்டியும், மணி ஓசை எழுப்பியும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

 

CORONAVIRUS ISSUES DINDIGUL MARRIAGE FUNCTION

 

இந்த நிலையில்தான் திண்டுக்கல்லைச் சேர்ந்த மண மகன் ராஜேஸ் கண்ணனுக்கும் அருப்புக்கோட்டை சேர்ந்த மணமகள் உமாமகேஸ்வரிக்கும்  கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திண்டுக்கல்லில் உள்ள சாத்தங்குடி நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நேற்று (22/03/2020) இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 

 

CORONAVIRUS ISSUES DINDIGUL MARRIAGE FUNCTION

 

ஆனால் ஏற்கனவே திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டு இருந்ததால் குறிப்பிட்ட இந்த நாளில் திருமணம் நடக்க வேண்டுமே தவிர தள்ளிபோட கூடாது என்று இருவீட்டாரும் ஒருமனதாகப் பேசி முடிவு செய்ததின் பேரில் அதே நாளில் நடத்த திட்டமிட்டனர். அதன்படி உறவினர்கள் முன்னிலையில் இத்திருமணம் நேற்று (22/03/2020) காலை 07.00 மணி முதல் 08.00 மணி வரை நடைபெற்றது.

 

CORONAVIRUS ISSUES DINDIGUL MARRIAGE FUNCTION

 

சுய ஊரடங்கு காரணமாக உறவினர்களும், நண்பர்களும் பெரிய அளவில் திருமணத்திற்கு வருகை தராவிட்டாலும் கூட இருவீட்டார் உறவினர்கள் முன்னிலையில் இத்திருமணம் முறைப்படி நடைபெற்றது. இத்திருமணத்துக்கு வந்த உறவினர்களுக்கு இருவீட்டார் சார்பில் 'மாஸ்க்' கொடுத்தனர். அதுமட்டுமல்லாமல் கைகளைக் கழுவுவதற்கு 'கிருமி நாசினி' கொடுக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி கொண்டுதான் உறவினர்கள் மணமேடைக்குச் சென்று மணமக்களின் திருமணத்தையும் பார்த்துவிட்டு  வாழ்த்துகளையும் கூறி விட்டுச் சென்றனர்.

 

CORONAVIRUS ISSUES DINDIGUL MARRIAGE FUNCTION

 

இதுபற்றி மணமகன் உறவினர்கள் சிலரிடம் கேட்டபோது, "கரோனா வைரஸை ஒழிக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனிக்கவனம் செலுத்தி மக்கள் மத்தியில் பரவாமல் இருக்க நேற்று (22/03/2020) ஒரு நாள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று கூறியிருக்கிறார். அது உண்மையிலேயே பாராட்டக்கூடிய விஷயம் இருந்தாலும், ஏற்கனவே திருமணம் நிச்சயக்கப்பட்ட பத்திரிகைகளும் ஊர் முழுவதும் கொடுத்து விட்டோம். அப்படி இருந்தும் திருமணத்தைத் தள்ளிப் போடக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகத் தான் இரு வீட்டார் உறவினர்களை மட்டும் இரவோடு இரவாக அழைத்து வந்து அதிகாலையில் இத்திருமணத்தை நடத்தி உறவினர்களையும் அனுப்பி வைத்து விட்டோம்.

அந்த அளவுக்கு பிரதமர் மோடியின் உத்தரவை நாங்களும் மதிக்கிறோம். அதுபோல் காவல்துறையினரும் எங்களை எந்த ஒரு தொந்தரவும் செய்யவில்லை. திருமணம் முடிந்தவுடன் உடனடியாக உறவினர்களை அனுப்பச் சொல்லியிருந்தார்கள். அவர்களின் அறிவுரையின் பேரில் நாங்களும் அனுப்பி விட்டோம். இப்படி கரோனா ஒழிப்பு தினத்தன்று திருமணம் நடந்ததும் பெருமையாக இருக்கிறது" என்றனர். பொதுவாகத் திருமண நாளை மறந்துவிட்ட காரணத்துக்காக கணவன் - மனைவிக்குள் சண்டைகள் வருவதுண்டு. ஆனால், இவர்களது திருமண நாள் மறக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். புதுமண தம்பதிக்கு வாழ்த்துகள்!!!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.