Skip to main content

கரோனா வைரஸ் தொற்று பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட 16 பேர் புழல் சிறைக்கு மாற்றம்!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

 

சேலத்தில், கரோனா வைரஸை பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட இந்தோனேசிய மத போதகர்கள் உள்பட 16 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆத்தூர் கிளைச்சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.

கரோனா வைரஸ் பரவல் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியபோதே, தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, ஆரம்பத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனா தொற்றுக்குப் பல நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
 

இந்நிலையில், மார்ச் 11ம் தேதியன்று, இந்தோனேசியா நாட்டில் இருந்து சேலம் வந்த 11 பேர் கொண்ட மத போதகர்கள் குழு மற்றும் சென்னையைச் சேர்ந்த அவர்களுடைய வழிகாட்டி ஒருவர் என 12 பேரை சுகாதாரத்துறையினர் பிடித்து பரிசோதனை செய்தனர். அவர்களில் ஐந்து பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 

coronavirus indonesia 16 persons chennai puzhal prison


ஆனால், அதன்பிறகுதான் சேலம் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு பெரும் தலைவலியே காத்திருந்தது. இந்தோனேசிய மத போதகர்கள் சென்று வந்த மசூதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தனிமைப்படுத்திய சுகாதாரத்துறையினர், 25,000- க்கும் மேற்பட்டோரிடம் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்தனர்.

இது ஒருபுறம் இருக்க, டெல்லியில் நடந்த தப்லீக் முஸ்லிம் மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. ஏப்ரல் 16-ம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் 22 பேருக்கு இந்நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
 

http://onelink.to/nknapp


இந்நிலையில்தான், சேலத்தில் கரோனா வைரஸ் பவரலுக்கு காரணமாக இருந்ததாக இந்தோனேசிய மத போதகர்கள் 11 பேர் உள்பட மொத்தம் 16 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் சிகிச்சையில் இருந்த இந்தோனேசியர்களும், உடன் வந்த வழிகாட்டியும் நோயிலிருந்து மீண்டனர். இதையடுத்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

வைரஸ் பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆத்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 16 பேரும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆத்தூரில் இருந்து சென்னை புழல் மத்தியச் சிறைக்கு வியாழக்கிழமை (ஏப். 16) கொண்டு செல்லப்பட்டு, அடைக்கப்பட்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.