Skip to main content

"கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை, ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்"- சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேட்டி!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

 

coronavirus cuddalore district special officer inspection

 

தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்தவும், மாவட்ட அளவிலான தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் மாவட்டந்தோறும் முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைச் சிறப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்து உள்ளது. 

 

அதன்படி, கடலூர் மாவட்டத்திற்கு கரோனா தடுப்பு கண்காணிப்புச் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் அதிகாரிகளிடம் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நேற்று (26/06/2020) கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கடலூர் மாவட்டத்திற்கு வந்தார். 

 

நேற்று (26/06/2020) காலை கடலூர் மாவட்ட எல்லையான சின்ன கங்கணங்குப்பம் சோதனைச் சாவடிக்கு வந்தவர், சோதனைச்சாவடியில் நடைபெற்று வரும் தடுப்புப் பணிகளைப் பார்வையிட்டார். பின்னர் கடலூர் நகராட்சியில் கட்டுப்பாட்டுப் பகுதிகளான ஆல்பேட்டை, திருப்பாப்புலியூர், வெள்ளி மோட்டான் தெரு ஆகிய கண்காணிப்புப் பகுதிகளை ஆய்வு செய்தார். 

 

மதியம் சிதம்பரம் மீதிகுடி நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்புப் பகுதிகளில் ஆய்வு செய்தவர், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கோல்டன் ஜுப்ளி ஹாஸ்டலை பார்வையிட்டார். அதன்பின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்து, கண்ணீருடன் கலங்கி நின்ற கரோனா நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையும், ஆறுதலும் கூறினர். சிதம்பரத்திற்குச் சென்ற ககன்தீப்சிங் பேடியை நடராஜர் கோவில் டிரஸ்டி கைலாச சங்கர தீட்சிதர் உள்பட 3 தீட்சதர்கள் சந்தித்து ஆனித்திருமஞ்சன விழாவில் பொதுமக்கள், சிவனடியார்கள் பெண்கள் ஆகியோருக்கு கரோனா வைரஸ் சோதனை செய்து அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.

 

மாலையில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

 

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி, "தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பொதுமக்கள் இரண்டு மாதங்களுக்கு தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், கை கழுவும் பழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும், வியாபாரிகள் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த கிருமிநாசினி தெளிப்பதுடன் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

 

coronavirus cuddalore district special officer inspection

 

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட உதவ வேண்டும். கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை, ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

 

பொதுமக்கள் சளி, காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கடந்த 10 நாட்களாக யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்ற விவரத்தைக் கண்டிப்பாக அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். 

 

அதன்மூலம் அவர்களையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர், உமிழ்நீர்ப் பரிசோதனைக் கருவி, N-95 முகக்கவசம் போன்றவைகள் இருக்கிறதா? குறைபாடுகள் உள்ளதா? என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

 

தொற்றுடையர்வர்கள், சிகிச்சை பெற்றவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க 10 நாட்கள் கபசுர குடிநீர் கண்டிப்பாகப் பருக வேண்டும். மேலும் சிங் மாத்திரை உட்கொள்ள வேண்டும். பொதுமக்களும் சரியான விதத்தில் கபசுர குடிநீர் பருகலாம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Next Story

லாரியுடன் சிக்கிய 1,425 கிலோ தங்கம்; பறக்கும் படை அதிரடி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
1,425 kg of gold caught with the truck; The Flying Squad is in action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள், வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை குன்றத்தூர் அருகே 1,425 கிலோ தங்கத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வந்த சிறிய ரக லாரி ஒன்றை சோதனையிட்ட போது, அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 1,425 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, தங்க சேமிப்பு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. அவற்றை தற்போது அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் .பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.