Skip to main content

''கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது''- ராதாகிருஷ்ணன் பேட்டி!

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

'' Corona vulnerability is likely to increase '' - Radhakrishnan interview!

 

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் சற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழக அரசு என்றுமே மாஸ்க் கட்டாயம் இல்லை என்ற கருத்தை வெளியிடவில்லை. ஆனால் அதுபோன்ற தவறான புரிதல் இங்கு உள்ளது. யாருக்காவது அறிகுறி இருந்தால் 100 சதவிகிதம் டெஸ்ட் பண்ண சொல்லிருக்கிறோம். அதேபோல் முதல்வரும் கரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.  

 

14 ஆயிரம் என்று இருந்த பரிசோதனை எண்ணிக்கை இன்று 18 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதையும் படிப்படியாக அதிகரித்து 25 ஆயிரம் என்ற அளவிற்கு பரிசோதனை செய்ய சொல்லியுள்ளோம். மாவட்ட ஆட்சியர்களுக்கு 6 முக்கிய அறிவுறுத்தல்களைக் கொடுத்துள்ளோம். பொது இடத்தில் மாஸ்க் அணிய வேண்டும், தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும், மருத்துவ ரீதியாக தயாராக இருக்க வேண்டும், ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்டிங்கை அதிகரிக்க வேண்டும், பொதுமக்களுக்கு பழக்கங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும். கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 என இருந்த நிலையில் சென்னை ஐஐடியில் மட்டும் ஒரே நாளில் 12 பேருக்கு கரோனா என்றால் படிப்படியாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க கண்டிப்பாக வாய்ப்பு உண்டு. ஆனால் இது பதற்றப்பட வேண்டிய செய்தி அல்ல. மாஸ்க் போடுவது, கைகளை நன்கு கழுவுவது, தள்ளிநிற்பது போன்றவற்றை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்'' என்றார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.