Skip to main content

தமிழகத்தில் இன்று மேலும் 743 பேருக்கு கரோனா! 13 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு!!!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

 corona virus updates - April20

 

இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த நாடுதழுவிய 3- ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு, மே 31 ஆம் தேதி வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஊரடங்கு நீட்டித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையிலும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது அரசுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.  


இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 743 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்சமாக சென்னையில் இன்று 557 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை சென்னையில் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 8228 ஆக உள்ளது. தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87ஆக உள்ளது. கரோனா பாதிப்பிலிருந்து 987 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கையும் 5,882 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்