Skip to main content

அரசியல் பாகுபாடு வைரஸ் வேண்டாம்...  -எடப்பாடி பழனிசாமிக்கு திருப்பூர் எம்.பி. கடிதம்

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

கரோனா வைரஸ் தொற்று என்கிற எவ்வளவு பெரிய ஆபத்துடன் மனித சமூகம் மோதி வருகிறது. இதில் சாதி, மதம் இல்லை. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற பேதம் இல்லை. எல்லோரும் ஒரணியில் நின்று கரோனா வைரஸ் கொடுங்கோலனை விரட்டுவதே சரியான பாதையாக இருக்க முடியும்.

ஆனால் இதிலும் அரசியல் பேதம் இருக்கிறதே என கவலையுடன் பேசுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யான தோழர். திருப்பூர் சுப்பராயன். "கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, அதிலிருந்து மக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அக்கறையுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றால் அதிகாரிகள் பேதம் இல்லாமல் நடக்க வேண்டும்.

மார்ச் மாதம் 25 மற்றும் 30ந் தேதி என திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் இரண்டு முறை கரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினார்கள். இந்த இரண்டு கூட்டங்களிலுமே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான என்னை அழைக்கவில்லை. அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அதில் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால் தொகுதி எம்பியான என்னை அவர்கள் அழைக்கவில்லை.

 

Tirupur

இங்கு மட்டுமல்ல பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் (திமுக) ஆய்வு கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. கோவை மாவட்ட நிர்வாகம் நடத்திய ஆய்வு கூட்டத்திற்கு கோவை எம்.பி. நடராஜன் (மார்க்சிஸ்ட்) அவர்களுக்கும் அழைப்பு கொடுக்கவில்லை. நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு தொகுதி எம்.பி.யான ஆ. ராசாவையும் (திமுக) அழைக்கவில்லை. ஈரோடு மாவட்ட நிர்வாகம் நடத்திய ஆய்வு கூட்டத்தில் தொகுதி எம்.பி.யான கணேசமூர்த்தி (மதிமுக) அவர்களையும் அழைக்கவில்லை. 

ஏன் இந்த அரசியல் பாகுபாடு? அரசு நிர்வாகம் தடுப்பு நடவடிக்கை எடுத்து அது நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அதுபற்றிய ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டிய கடமை தொகுதி எம்.பி.களான எங்களுக்கு உண்டு. அரசு நிர்வாகம் என்பது அரசியல் கட்சி சார்பு உடையதல்ல. தொகுதி மக்களினுடைய பிரச்சனைகளை எடுத்துரைத்து அதை அரசு நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்றால் அந்த ஆய்வுக் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஏன் இந்த புறக்கணிப்பு? இது சட்டப்படி சரியானது அல்ல. 

எனவேதான் தமிழ்நாட்டின் முதல்வராக உள்ள எடப்பாடி. பழனிசாமி அவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அந்தந்த தொகுதி எம்பிக்களை மாவட்ட நிர்வாகம் அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என கடிதம் எழுதி உள்ளேன். இந்த வைரஸ் தாக்கு என்பது மக்களிடையே பரவலான பீதியை ஏற்படுத்தியிருந்தாலும் அரசியல்ரீதியாக இவர்கள் இதுபோன்ற பாகுபாடு வைரஸை வைத்திருக்கக் கூடாது என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.