Skip to main content

தேனி மாவட்டத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கரோனா!

Published on 10/04/2020 | Edited on 10/04/2020

 

தேனி மாவட்டத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
 

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் உட்பட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதில் பெண் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்தார். மீதியுள்ள  22 பேருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

 

 

theni



இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குப் பாதிப்பு உள்ளதா எனப் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் வீடு தேடிச் சென்று பரிசோதனை செய்யும் பணிகள் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இதில் போடியைச் சேர்ந்த 16 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதனால் தேனி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.
 
இந்த நிலையில் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 16 பேருக்கு நேற்று முன்தினம் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு செய்ததில் 20 வயது இளம்பெண் ஒருவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 

http://onelink.to/nknapp


இவர் ஏற்கனவே கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் ஒருவரின் மகள். இதனால் மாவட்டத்தில் கரோனா  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தேனி உத்தமபாளையம் கம்பம் சின்னமனூர் பகுதிகளுக்கு வீடு தேடிச் சென்று கரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. தேனியில் 8 பேர், உத்தமபாளையத்தில் 13 பேர், கம்பத்தில் மூன்று பேர், சின்னமனூரில் ஆறு பேர் என 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆய்வு முடிவுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
அதுபோல் போடியைச் சேர்ந்த 16 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக நேற்று முன்தினம் தெரிய வந்தது. அவர்கள் வீட்டுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களைத் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவக் குழுவினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் சிலர் கரோனா பயத்தில் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்தனர். வீட்டிலிருந்தே சிகிச்சை பெற அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர். பின்னர் அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் அறிவுரை வழங்கினர். அதை அடுத்து ஒவ்வொரு குடும்ப உறுப்பினராக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். நேற்று வரை அவர்களை அழைத்துச் செல்லும் பணியே நடந்தது.


அதேபோல் உத்தம பாளையத்தில் நேற்று மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்துவக் குழுவினர் சென்றபோது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிலர் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர்களுக்கும் கரோனா  தீவிரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மருத்துவப் பரிசோதனை அழைத்துச் செல்லப்பட்டனர்.


தேனியில் பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் 7 பேர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றொருவர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களை வாகனத்தில் அழைத்துச் சென்ற டிரைவர் ஆவார். இவர்களில் யாருக்காவது கரோனா உள்ளதா? என்பது பரிசோதனைக்குப் பிறகு தெரியவரும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.