Skip to main content

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா... பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26ஆக உயர்வு...!

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562லிருந்து 606 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கரோனாவுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

 

corona virus - Tamilnadu - Minister Vijayabaskar tweet

 

 

தமிழகத்தில் 23 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.  

 

சார்ந்த செய்திகள்