சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ கடந்துள்ளது. இந்த வைரசால் இந்தியாவில் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
ADVERTISEMENT
இதையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை திருமலா திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள பெருமாள் ஆலையத்தில் கரோன வைரஸ் தடுப்பு மற்றும் பொதுமக்களை பாதுகாக்க சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றதது. அதில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments