இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்திரவு 21 நாட்களில் இன்று மூன்றாம் நாள். இந்நிலையில் அரசு நிவாரண நிதிகளை அறிவித்துள்ளது. அதே போல் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஐம்பது லட்சம், ஒரு கோடி என அறிவித்துள்ளார்கள். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி-களான கேரளாவைச் சேர்ந்த பினாய் விஸ்வம், தமிழகத்தை சேர்ந்த திருப்பூர் சுப்பராயன் மற்றும் நாகப்பட்டினம் செல்வராஜ் ஆகிய மூவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை அரசின் நிவாரண நிதிக்கு கொடுப்பார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி. ராஜா அறிவித்துள்ளார்.

corona virus Relief - Communist MPs gave one month salary!

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஏற்கனவே கம்யூனிஸ்ட் எம்பிகள் தங்களது சம்பளத்தை கட்சிக்கு கொடுத்து கட்சி கொடுக்கிற ஊதியத்தை மட்டுமே பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் அவர்கள் முழு சம்பளத்தையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசின் நிவாரண நிதிக்கு கொடுத்து ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது.