Skip to main content

முதல் மற்றும் இறுதி வணக்கம்!  அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க ஊழியர் பரபரப்பு கடிதம்

Published on 29/03/2020 | Edited on 29/03/2020

 

என் போன்ற அரசு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு முதல் மற்றும் இறுதி வணக்கம்! இது ஒரு எச்சரிக்கை பதிவு! என தலைப்பிட்டு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் ஊழியர் பிச்சைப்பிள்ளை என்பவர் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். 
 

அதில், 
 

"கரோனா" இது உலகையே ஆட்டி படைக்கும் கொடிய நோய். ஒரு மனிதனின் உடலிலிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுவதோடு மட்டும் அல்லாமல் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு கைமாறும் எந்தவொரு பொருள்களிலும், காற்றின் மூலமாகவும் அதிவேகமாக பரவி வரும் கொடியநோய் தான் covid-9 என்கிற கரோனா! 
 

உலக நாடுகளையே அச்சுறுத்தும் இந்த நோய் மனிதர்களை தாக்கும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.

 நம் இந்தியாவில் இப்போது அதிவேகமாக பரவி வரும் சூழலில் நம் பாரதப்பிரதமர் துரிதமாக சிந்தித்து நோய் பரவும் நிலையை தடுக்க அமல் படுத்தியதுதான் இந்த முழுஊரடங்கு உத்தரவு. 
 

ஆனால் இதில் மாநில அரசுகளின் பங்கு என்ன?
 

 நான் இப்போது நம் நாட்டில் நடக்கபோகும் நிலையை கூறுகிறேன். ஊரடங்கு உத்தரவு தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வந்த நிலையில் திடீரென்று ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம், அது தான் அரசு அறிவித்த ரூபாய் ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் இலவசமாக அத்தியாவசிய பொருட்களை நியாயவிலைக்கடை பணியாளர்களின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சென்றடையுமாறு அறிவித்தது. 

 

ration card




இதில் பாரதப்பிரதமரின் ஊரடங்கு வருகிற ஏப்ரல் 14-ம் தேதியுடன் தமிழ்நாட்டில் முடிவடைந்துவிடும்.
 ஆம் தமிழ்நாட்டின் மக்கள் படையெடுப்பு நியாயவிலைக்கடையை நோக்கி இருக்கும். இலவசத்துக்காக ஒட்டு மொத்த மக்களும் நியாயவிலைக்கடையை முற்றுகையிடுவார்கள். இங்கே மக்களை மகிழ்ச்சி படுத்துவதாக நினைத்து ஒட்டு மொத்த மக்களையும் கரோனோவுக்கு பலியாக்கபோகிறது.
 

எத்தனை கட்டுப்பாடுகள் போட்டாலும் இலவசம் என்று அறிவித்தால் மக்களுக்கு கடிவாளம் போடமுடியாது என்று இந்த அரசுக்கு தெரியுதோ? இல்லையோ? ஆனால் நம் நியாயவிலைக்கடை பணியாளருக்கு நன்றாகவே தெரியும். இது அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும், அரசு சொல்வதை மட்டுமே கேட்கும்.
 

இன்றைய காலகட்டத்தில் நியாயவிலைக்கடைக்கு வேலைக்கும் வரும் விற்பனையாளர்கள் பட்டம் படித்தவர்கள். நம் நாட்டு சூழ்நிலையில் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் இருந்தனர். அரசியல்வாதிகள் ஐந்து முதல் ஆறு லட்சங்கள் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு இன்று அதிகமாக நியாயவிலைக்கடையில் விற்பனையாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். 

அவர்களுக்கு தொகுப்பூதியம் ஒரு வருடத்திற்கு வெறும் ஐந்தாயிரம் மட்டுமே.
 பண்டிகை காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் அரசின் கவனம் நியாயவிலைக்கடையின் மீது இருக்கும். ஏனென்றால் இவர்கள் மூலமாகதான் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைகிறது. இந்த கடினமான வேலையை செய்யும் நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஐந்தாண்டுகளாக முப்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு ஒரு போதும் செவி சாய்க்கவில்லை. நீங்கள் செய்வது அரசுப்பணி ஆனால் முழுமையான அரசு ஊழியர் அல்ல என்று தமிழக அரசு கடந்த சட்டசபையில் தெரிவித்திருப்பது எங்கள் மத்தியில் அதிருப்தியையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி வருகிறது.


எப்போது நிறைவேறும் எங்கள் முப்பது அம்சகோரிக்கைகள்?


 அதிகாரிகள் எடுத்த முன்னெச்சரிக்கை என்ன? இதோ

 நியாயவிலைக்கடைக்கு வரும் மக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் கட்டம் கட்டி நிற்கவேண்டுமாம். 

அதற்கு முன்னதாக டோக்கன் முறையை அமல்படுத்தவேண்டும் எவ்வாறு அமல்படுத்துவது டோக்கனை வீடு வீடாக கொண்டு தர நாங்கள் தயார். மக்கள் வாங்க தயாரா இருப்பார்களா? என்று சிந்திக்கவில்லை அதிகாரிகள். 

அடுத்து மக்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்கனவே நியாயவிலைக்கடைகளில் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள நான்கு இன்ச் பைப் குழாய்களில் விற்பனையாளர் பொருட்களை போடவேண்டும். ஏற்கனவே அதிகாரிகள் இதில் பொருட்கள் போட்டு ஆய்வு செய்தார்களா என்றால் இல்லை. இதில்  பத்து கிலோ அரிசியை தூக்கி அந்த குழாயில் கொட்டுவது எவ்வளவு சிரமம் உள்ளது என்று எனக்கு நன்றாக தெரியும். இவர்களால் பத்து இன்ச் அளவு பைப்குழாய்கூட வாங்கி தரவில்லை என்பதே வேதனையான விஷயம். 

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு கொடுக்கும் பொருட்களில் பரவும் கொடிய நோய் குடும்பஅட்டைகள் வழியாக விற்பனையாளருக்கும் மக்களுக்கும் மாறி மாறி நோய்தொற்று பரவும் என்று தெரிந்தும் தெரியாமல் இருப்பது இந்த அரசும் அதிகாரிகளும் தான் என்பதை நாங்கள் மறக்கமாட்டோம்.

எனவே தமிழக அரசே இலவசங்களை அள்ளிதருவதற்கு இது ஏற்ற காலம் அல்ல. எத்தனையோ இலவச திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கு வெற்றிகரமாக கொண்டு சேர்த்த நாங்கள் ஏற்கனவே ஊதிய பற்றாக்குறையால் பட்டினிச்சாவு அடைந்து வருகிறோம். பேருந்து வசதி இல்லாத இந்த நேரத்தில் எத்தனையோ பெண் விற்பனையாளர்கள் முப்பது, நாற்பது கிலோ மீட்டர் வந்து போகும் இக்கட்டான சூழ்நிலையை சிந்திக்காத அதிகாரிகளும், அரசும் எங்களுக்கு  இதுநாள் வரை என்ன செய்தது?


 

அரசே நாங்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற தயாரா?

 நியாயவிலைக்கடை ஊழியர்கள் பணிசெய்து முடித்தவுடன் அவர்கள் ஏதோ ஒரு இடத்தில் தனிமைப்படுத்தபட வேண்டும். இல்லையென்றால் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்று முழு மருத்துவ பரிசோதனையை  தினமும் செய்ய அரசு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஏனென்றால் எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது.

விற்பனையாளருக்கு மரணம் ஏற்பட்டால் மூன்று லட்சம் அரசு இழப்பீடு தருகிறது. அதை இந்த பேரிடர் காலத்தில் வேலை செய்யும் மருத்துவ பணியாளருக்கு இணையாக எங்களுக்கும் ஐம்பது லட்சமாக உயர்த்தி தர வேண்டும்.

 தொலைதூரத்தில் இருந்து வரும் விற்பனையாளருக்கு குறிப்பாக பெண் விற்பனையாளருக்கும் வாகன வசதியும், பாதுகாப்பையும் ஏற்படுத்தி தரவேண்டும் .

பேரிடர் காலங்களிலும் பண்டிகை காலங்களிலும் ஏற்படும் கூடுதல் பணிசுமையில் வேலை செய்யும் விற்பனையாளருக்கு இரட்டிப்பு ஊதியம் உடனே அரசு அறிவித்தட வேண்டும்.

மேலும் நம்நாட்டில் நோயின் தாக்கம் குறைவாக உள்ள காரணத்தினால் மக்களிடையே அலட்சியம் அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து  வரும் கரோனாவினால் மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படும் வரை அரசு இந்த இலவச திட்டங்களை மறுபரிசீலனை செய்து காலம் தாழ்த்தி  செயல்படுத்தவேண்டுமாறு ஒட்டு மொத்த விற்பனையாளர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இதை அனைத்து விற்பனையாளர்கள் சார்ந்த தொழிற்சங்கங்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஏப்ரல் 14 வரை அனைத்து நியாயவிலைக்கடைகளும் இயங்காமல் இருக்கவும் மக்களின் நலனுக்காக நல்ல முடிவை அரசு எடுக்க ஆவணம் செய்ய வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். 

குறைந்த கூட்டம், அதும் ஆண்கள் மட்டுமே வந்துபோகும் மதுகடையை மூடியது போல் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண்பெண் இருபாலாரும் வந்து போகும் நியாயவிலைக்கடையை அரசு திறக்கசொல்வது எந்த விதத்தில் நாயம்.
இந்த கடினமான சூழலில் இச்செய்தியை கடைக்கோடி மக்களுக்கு சென்றடையவேண்டுமாய் ஒவ்வொரு விற்பனையாளரையும் கேட்டுக் கொள்கிறேன்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

1,400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
1,400 kg ration rice smuggling; two arrested

திருச்சியில் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்ற 1,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட ரோந்து மற்றும் வாகன சோதனையின்போது, திருச்சி தென்னூர் ரங்கநாதபுரம் ஆபீஸர்ஸ் காலனி அருகே நான்கு சக்கர வாகனத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதில், இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு வந்த ரேஷன் அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது. அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் தென்னூர் குத்பிஷா நகரைச்சேர்ந்த ப.அப்துல் சுக்கூர் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஹ.சதாம் உசேன் (32) என்பதும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும், அந்த வகையில் விற்பனைக்காக அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1,400 கிலோ அரிசி, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story

இரவில் கொட்டும் பனியில் ரேஷன் கடை வாசலில் காத்துக் கிடக்கும் பொதுமக்கள்!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
People waiting at the door of ration shop at night to renew Aadhaar card!

தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதன்மூலம் 7 கோடியே 51 ஆயிரத்து 954 பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். இதில் 6 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரத்து 407 நபர்கள் மட்டுமே தங்கள் ஆதார் எண்ணை தங்களது குடும்ப அட்டையோடு இணைத்துள்ளனர். இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உணவுப் பொருள் வழங்கல் திட்டம் கணினி மயமாக்கப்பட்டு, ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளதாலும், கைரேகைப் பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே கைரேகையைப் பதிவு செய்துள்ளதால், மற்றவர்களும் கட்டாயம் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என தற்போது அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கைரேகை பதிவு செய்யவில்லை என்றால் அவர்கள் பெயர் கார்டில் இருந்து நீக்கப்படும், பொருட்கள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் பதட்டமடைந்தனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை முக்கிய உத்தரவு பிறப்பித்தது. அதாவது, நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவு செய்ய யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக் கூடாது. விற்பனை முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை முடிக்க வேண்டும். பயனாளிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் குழப்பமின்றி பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெயர் நீக்கப்படும் என்கிற தகவலை ரேஷன் கடை ஊழியர்கள் திரும்ப திரும்ப பொதுமக்களிடம் கூறி பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் அட்டையில் உள்ள பெரியவர்கள், வயதானவர்கள் சென்று கைரேகை வைக்கின்றனர். அதோடு பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளை லீவு போடவைத்து அவர்களை அழைத்துக்கொண்டு சில பெற்றோர்கள் நியாய விலைக்கடை வாசலில் நின்று கொண்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

People waiting at the door of ration shop at night to renew Aadhaar card!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பல இடங்களில் இரவு நேரங்களில் நியாயவிலைக்கடைகள் திறக்கப்பட்டு பொதுமக்கள் கைரேகை வைத்துவருகின்றனர். பணியிலும் வயதானவர்கள் வரிசையில் காத்திருந்து கைரேகை வைக்கிறார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். கைரேகை வைக்க இறுதி தேதி என அரசு எதுவும் அறிவிக்கவில்லை, கட்டாயம் உடனே வைக்கவேண்டும் என்றும் சொல்லவில்லை. ஆனாலும், பொருட்கள் வாங்குவதற்கு கைரேகை ஒவ்வொரு உறுப்பினருக்கும் அவசியம் பதிவு செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

கைரேகை பதிவு செய்யாதவர்களுக்கு அரிசி வழங்கப்படாது என ஊழியர்கள் தொடர்ச்சியாக தெரிவிப்பதாக குற்றம்சாட்டி வரும் மக்கள், இதன் காரணமாக ஆதார் கார்டு கைரேகை வைப்பதற்காக தொடர்ந்து பொதுமக்கள் இரவு எட்டு மணியில் இருந்து தற்போது வரை காத்துக் கிடக்கும் அவல நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.